மும்பையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உடல்நலக் குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி ஆகியோரும் தொழிலதிபர் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரத்தன் டாடா உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உலகம் முழுவதும் தொழிலதிபர்களுக்கு அவர் முன்மாதிரியாக திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார்.
தவிர ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அமீர் கான் உள்ளிட்டோரும் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரத்தன் டாடா மறைவையொட்டி, நடிகர் அமிதாப் பச்சன் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.