கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ராகுல் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரயில் விபத்து சம்பவத்தில் ராகுல்காந்தி அரசியல் செய்யக்கூடாது என்றும், காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்து குறைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
ரயில்வே துறையை, உயர்ந்த தரத்திற்கு பிரதமர் மோடி உயர்த்தி உள்ளதாகவும், வந்தே பாரத் ரயில் தொடங்கி புல்லட் ரயில் வரை அதிகமான ரயில்வே நெட்வொர்க்கை வைத்துள்ளது இந்தியா மட்டுமே என எல்.முருகன் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.