நெல்லையப்பர் காந்தி மதியம்மாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனைத்தொடர்ந்து விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி அம்பாள், பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
தொடக்க விழாவையொட்டி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.