தூத்துக்குடியில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான பயோ டீசலை கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் கடத்தப்படுவதாக கடலோர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துறைமுகத்திற்கு வரும் லாரிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது லாரி மூலம் கொண்டுவரப்பட்ட பயோடீசல் பேரல்களை கைப்பற்றிய அதிகாரிகள் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.