சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மறைப்பதற்காக திமுக அரசு ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் தேர்மாறன் நினைவிடத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து வேலூர் இப்ராகிம் செய்தியாளரிடம் பேசினார். அப்போது, சுதந்திர போராட்டத்தில் கட்டபொம்மன் ஊமைத்துறை மருது சகோதரர்கள் ஆகியோருக்கு உதவி புரிந்த சுதந்திர போராட்ட வீரர் பாண்டியாதிபதி தேர்மாறனை தமிழக அரசு சுதந்திரப் போராட்ட வீரராக அறிவித்து அவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சுதந்திர போராட்ட வீரர்களை கூட மத்திய அரசு கண்டுபிடித்து சொன்னால் தான் தமிழக அரசுக்கு தெரியும் என்கிற நிலையில் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது சுதந்திரத்தைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. கொள்ளை அடிப்பது பற்றியும் ஊழல் செய்வது பற்றியும் ஆளுநரை எதிர்த்து பேசி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சென்னை வெள்ளம் மூலம் திமுக அரசின் ஊழல் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அதை மறைக்க ஆளுநருக்கு எதிராக பேசி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.