கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா தலங்களுக்கு மாற்றுப் பாதையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைபுரிவது வழக்கம். இந்நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சிலர், சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை பெறவேண்டும் என எண்ணி ஆபத்தான அருவிகள் மற்றும் வியூ பாயிண்ட்களுக்கு ஆபத்தான முறையில் ஆறுகளை கடந்து பிக்கப் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சவாரிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்குகின்றனரா? வனத்துறை அனுமதி பெற்றுதான் சுற்றுலா பயணிகள், பயணம் மேற்கொள்கிறார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.