தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற உறுதி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கள ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு அளித்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுதி குழு தலைவர் வேல்முருகன், தமிழகத்தில் 47 ஆயிரம் குளங்கள் மற்றும் ஏரிகள் இருந்த நிலையில் தற்போது 37 ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், மதுக்கடைகளை மூடுவது குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் எந்தவிதமான அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவும் கூறினார்.