வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 24, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் இந்திய வீரர்கள் மீண்டும் ரோந்து செல்வதற்கு, சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய-சீனா எல்லை பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே 3,488 கிலோமீட்டர் தொலைவுக்குப் பொதுவான எல்லை உள்ளது. இதனால், கிழக்கு லடாக்கில், வரையறுக்கப் படாத நிலையில், எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவமும் அவரவர் எல்லையில் ரோந்து செல்வதுண்டு.

2020ம் ஆண்டில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், வரையறுக்கப்படாத எல்லை பகுதியில், இந்திய ராணுவ ரோந்து படையினர் மீது, சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் இறந்தனர் இதனையடுத்து, இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன.இதனால், 45 ஆண்டுகள் இல்லாத வகையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

2020ம் ஆண்டுக்கு பிறகு, இந்தோனேஷியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்த போதிலும், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையே பரஸ்பர உறவை மேம்படுத்தவதற்கான செயல்திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

தொடர்ந்து, இராணுவ ரீதியாகவும், வெளியுறவுத் துறை அமைச்சக அளவிலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், மொத்தம்,ஏழு ரோந்து இடங்கள் தொடர்பாக பிரச்னை இருந்தது. பல கட்ட பேச்சுக்குப் பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும் டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பான பிரச்னை நீடித்து வந்தன.

இப்போது அதிலும் சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், இருநாட்டு உறவுகளில் நல்ல முன்னேற்றம் வருவதற்கான தொடக்கமாக இந்த ஒப்பந்தம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முன்னதாக, சீனாவுடனான இறுக்கமான உறவுகளில் பல அதிரடி முடிவுகளை இந்திய அரசு எடுத்திருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. நிறுத்திவைக்கப்பட்ட நேரடி பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்தியாவிடம் சீன அரசு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறது.

மேலும், சீனர்களுக்கான விசா விண்ணப்பங்கள் மீது கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளில் சீனர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதுமட்டும் இல்லாமல், சீன நிறுவனங்களின் கையகப்படுத்துதல் மற்றும் முதலீடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, கூடுதல் அடுக்கு சோதனை மற்றும் பாதுகாப்பு அனுமதி விதிகளை இந்தியா கொண்டு வந்தது. இதனால், கடந்த 4 ஆண்டுககளில் முன்மொழியப்பட்ட சீன முதலீட்டில், பல கோடி ரூபாய்க்கான முதலீடுகள் அரசு ஒப்புதல் கிடைக்காமல் சிக்கிக் கொண்டன.

கூடுதலாக, டிக் டாக் உட்பட சுமார் 300 சீன மொபைல் ஆப்களை இந்தியா தடைசெய்தது. மேலும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ மீது , விசா விதிகளை மீறியதாகவும்,13 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மோசடி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப் பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பிய குற்றச்சாட்டில், 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான Xiaomi யின் சொத்துக்களை இந்தியா முடக்கியது. இந்த பின்னணியில் தான், இந்தியா-சீனா இடையேயான பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து, இரு தரப்பினரும் பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, 2020-ஆம் ஆண்டு, சீன எல்லையில் இந்திய வீரர்கள் எல்லையில் எதுவரை சென்றனரோ, மீண்டும் அதுவரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட முடியும் என்று,இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில், இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப் படுகிறது.

Tags: BrazilChinese President Xi JinpingBRICS summitsouth afrcaKazanchina presidentBRICS conferencePM ModiIndiarussiachina
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி1-ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை!

Next Post

சீனாவை கைகழுவும் ஜெர்மனி, இந்தியாவுடன் கை கோர்ப்பு, முதலீடுகளை குவிக்க முடிவு – சிறப்பு கட்டுரை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies