கரகர....மொறுமொறு...கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் - சிறப்பு கட்டுரை!
Aug 22, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரகர….மொறுமொறு…கமகம : தலைமுறை தாண்டி தடம்பதித்த செட்டிநாட்டு பலகாரம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு தனி இடம் உண்டு. பாரம்பரிய சுவை கொண்ட செட்டிநாட்டு பலகாரங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதற்கான ரகசியம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….

செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் 56 ஊர்களையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 ஊர்களையும் உள்ளடக்கியது. அந்த செட்டிநாட்டின் உணவு வகைகளுக்கு அறிமுகம் தேவையில்லை. சமையல் கலைக்கு புகழ் பெற்ற செட்டிநாட்டு பலகாரங்கள், உலக அளவில் மிகவும் புகழ் பெற்றவை. வருடம் முழுவதும் தயாரிக்கப்படும் இவ்வகை செட்டிநாட்டு பலகாரங்கள் தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகமாக அனைவராலும் விரும்பி வாங்கிச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, காரைக்குடி அருகே கோட்டையூர், பள்ளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காரம், இனிப்பு என பல்வேறு பாரம்பரிய செட்டிநாட்டு பலகாரங்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. லாபத்தை விட தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இன்று வரை இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்களுக்கு எப்போதும் கிராக்கி உண்டு என்கிறார் பலகாரங்கள் தயாரிக்கும் முத்துக் கருப்பி….

அனைத்து செட்டிநாட்டு பலகாரங்களும், இயந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய முறையில், உரலில் மாவுகளை இடித்து, கைகளால் முறைப்படி சலித்து பக்குவத்துடன் தயாரிக்கப்படுகின்றன. செட்டிநாட்டு சுவைக்காக, பல இடங்களில் இன்றும் விறகு அடுப்புகளில் தான் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், சுத்தமான செக்கு எண்ணெய்யில் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு எந்தக் கெடுதலும் வராது என பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

காரைக்குடியை சுற்றி வசிக்கும் பெண்கள், செட்டிநாட்டு பலகாரங்கள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல பெண்களின் குடிசை தொழிலாகவே இது மாறியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூர், கேரளா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும், சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் செட்டிநாட்டின் பலகாரங்கள் அனுப்படுகின்றன.

கல்யாண முறுக்கு, 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட தேன் குழல் முறுக்கு வகைகள், அதிரசம், மண ஓலம் , மாவு உருண்டை, சீடை, சீப்பு சீடை, தட்டை, கை முறுக்கு, காரா பூந்தி, மிக்சர் உள்ளிட்ட செட்டிநாடு பலகாரங்கள் மிகவும் பிரபலமானவை என்கிறார் வாடிக்கையாளர் மெய்யப்பன்.

கல்யாண சீர் முதல் வளைகாப்பு சீர், தீபாவளி சீர் என வீட்டு சுப நிகழ்ச்சிகளில். பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்களுக்குக் எப்போதும் தனி இடம் உண்டு. மேற்கத்திய பண்டங்களைச் சாப்பிடப் பழகி இருந்தாலும், விசேஷ தினங்களில், சுவையையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரக் கூடிய செட்டிநாடு பலகாரங்களை வாங்குவதில்தான் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags: sivagangaipudukottaiKaraikudiChettinad sweetsChettinad Palakarasdeepavali
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாலையில் யானை நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்!

Next Post

கடற்படையில் மிரட்டும் இந்தியா : 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ரெடி – சிறப்பு கட்டுரை!

Related News

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies