உக்ரைன் மீது தாக்குதல் - ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வடகொரியா - சிறப்பு கட்டுரை!
Jul 2, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைன் மீது தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வடகொரியா – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனின் ஆக்ரமிப்பில் உள்ள குர்ஸ்க் பகுதி கைப்பற்ற 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் புதின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

ரஷ்யாவும் வட கொரியாவும் தங்களுக்கு எதிராக ராணுவத் தாக்குதல் நடந்தால் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உதவி செய்வதை இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.

மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வடகொரியாவும், ரஷ்யாவும் ஒன்றாக களமிறங்க தயாராகி விட்டதையே இந்த ஒப்பந்தம் எடுத்து காட்டுகிறது.

ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபை, இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. தொடர்ந்து கடந்த வாரம் , ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் வழங்கியுள்ள ஆணையில், ரஷ்ய பிரதமர் புதின் கடந்த ஞாயிற்றுக் கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

2022ம் ஆண்டு, உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவப் படையெடுப்பைத் தொடங்கியது. வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்கள் நடத்திய இடங்களில் வட கொரியாவின் ஆயுதங்களின் தடயங்களை கண்டுபிடித்ததாக உக்ரைன் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் மாகாணமான குர்ஸ்க்கை கைப்பற்றிய உக்ரைன் சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும், பக்கத்து மாகாணமான Belgorod பெல்கோரோட் வரை தாக்குதலைத் தொடங்கியது.

குர்ஸ்க் பகுதியை மீட்டெடுக்க, ரஷ்யா தீவிரமாக போராடி வருகிறது. ரஷ்யாவின் தெற்கு குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் படைகளை எதிர்க்க, வட கொரியா 11,000 துருப்புக்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது.

வடகொரிய வீரர்களை எதிர்கொள்ள உக்ரைன் வீரர்கள் அச்சப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்திருந்த நிலையில், வடகொரியாவின் elite வீரர்கள் என கொண்டாடப்படும் இந்த சிறப்புப் படையினரில் 40 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யாவில் வடகொரிய ராணுவம் களமிறக்கப்பட்ட உடனேயே, வடகொரிய ராணுவத்தின் திறமை குறித்து ராணுவ வல்லுனர்கள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், குர்ஸ்கில் உக்ரைனை தாக்க சுமார் 50,000 ரஷ்ய மற்றும் வடகொரிய வீரர்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்கள் இல்லாமல் ஒரு புதிய படை திரட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க கூறியுள்ளது.

பீரங்கித் தாக்குதல், அடிப்படை காலாட்படை யுக்திகள் மற்றும் அகழிகளை அகற்றுதல் ஆகியவற்றில் வட கொரிய வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,வட கொரிய வீரர்களுக்கு இயந்திர துப்பாக்கிகள், துப்பாக்கி சுடும் துப்பாக்கிகள், தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையெறி குண்டுகளை ரஷ்யா வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு, உக்ரைனின் முக்கியமான நகரங்களான வுஹ்லேடர் மற்றும் உக்ரைன்ஸ்க் ஆகியவற்றை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. உக்ரைன் போரில் தொடர் வெற்றிகளை பெற்றுவரும் ரஷ்யா, உக்ரைனின் இன்னொரு முக்கியமான நகரமான Pokrovsk போக்ரோவ்ஸ்கை கைப்பற்றுவதற்கு முன்னேறுகிறது. போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தியுள்ளன.

மாஸ்கோவை நோக்கி வந்த சில ட்ரோன்கள் உட்பட ஆறு மாகாணங்களில் 84 உக்ரைன் ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மாஸ்கோவின் தென்மேற்கில் உள்ள ரமென்ஸ்கோய் மாவட்டத்தில், ட்ரோன் பாகங்கள் விழுந்ததால் ஐந்து பேர் காயமடைந்தனர் மற்றும் நான்கு வீடுகள் தீப்பிடித்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம், உக்ரைனின் ஒவ்வொரு பகுதியையும் குறிவைத்து,145 ட்ரோன்களை ரஷ்யா ஏவியுள்ளது. அவற்றில் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

அண்மையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக நடைபெற்ற இந்த உரையாடலின் போது, உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும், போரை கைவிட வேண்டும் என்றும் ரஷ்ய அதிபரை, ட்ரம்ப் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: russiaUkraineRussian president putinKursk regionNorth Korean troops
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு!

Next Post

3-வது பெரிய பொருளாதார நாடா? : இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத நாடுகள் – சிறப்பு கட்டுரை!

Related News

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies