3-வது பெரிய பொருளாதார நாடா? : இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத நாடுகள் - சிறப்பு கட்டுரை!
Aug 29, 2026, 04:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3-வது பெரிய பொருளாதார நாடா? : இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத நாடுகள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தவும், இந்திய அரசின் மீது அழுத்தத்தைக் கொடுக்கவும், காலிஸ்தான் தீவிரவாதிகளை மறைமுகமாக ஆதரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, தனது அனைத்து சர்வதேச உறவுகளிலும், தனது சொந்த நலன்களையே முதன்மைப்படுத்துகிறது. எப்போதுமே தன் வெளியுறவு கொள்கைகளைத் தமது நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் அமெரிக்கா தீர்மானிக்கிறது.

வெளிநாடுகளில் அமெரிக்க பெருநிறுவன நலன்களுக்கு ஏற்ற சூழலை உறுதி செய்வதில் அமெரிக்கா குறியாக இருக்கும். ஒரு நாட்டின் ஜனநாயக அரசால், அமெரிக்க நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்படும் போது , அமெரிக்கா அந்நாட்டில் ஜனநாயகத்துக்கு எதிராக போர் தொடுக்கிறது.

அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் நடத்தும் முறை வித்தியாசமானது. உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத மற்றும் தனி ராணுவ அமைப்புகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. மக்களாட்சி நடந்த நாடுகளில், அடக்குமுறையால் ஆட்சியைக் கைப்பற்றிய எண்ணற்ற சர்வாதிகார ஆட்சிகளுக்கும் அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.

முதலில் குறிப்பிட்ட நாட்டில், அரசுக்கு எதிரான தீவிரவாத குழுக்களை உருவாக்குகிறது. அந்த தீவிரவாத குழுக்களுக்கு மறைமுகமாக CIA மூலம் நிதியுதவி செய்கிறது. கூடுதலாக, தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கிறது. தீவிரவாத குழுக்களின் வருமானத்துக்காக, பெரும்பாலும் போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்த அமெரிக்கா உதவுகிறது. மேலும் அதிநவீன ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவும் துணை செய்கிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா இதே வகையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில்தான், அரசியல் காரணங்களுக்காக மத்திய கிழக்கில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா உருவாக்கி, பயிற்சி அளித்து, நிதியுதவி செய்து வந்தது.

ரஷ்யாவுடன் உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் எத்தியோப்பியா செயல்பட்டு வருவதால், அமெரிக்கா எத்தியோப்பியாவை சீர்குலைக்க முயல்கிறது. சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவுகிறது. லிபியாவில் கடாபியை வீழ்த்துவதற்கு அல் கொய்தாவுடன் அமெரிக்கா கூட்டு சேர்ந்தது. சிரியாவில் பஷர் அசாத்தின் ஆட்சியை எதிர்க்கும் குர்திஷ் ஒய்பிஜிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.

செர்பியாவில் உள்ள கொசோவோ தொடங்கி மத்திய கிழக்கு நாடுகளில் உட்பட ஆசியாவில் வங்கதேசம் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளிலும் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா தலையிட்டு வருகிறது.

இதே வகையில் தான், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் சுதந்திரமாக செயல் படுகின்றனர். அந்நாடுகளும், காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்நாட்டு கலவரத்தைத் தூண்டவும், இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன.

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் படுகொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு என கனடா பிரதமர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதும், இந்தியாவில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கைக்குக் கனடாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தியதும், இந்தியாவால் தேடப் படும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதும், அவர்களுக்கு அரசு பாதுகாப்புத் துறையில் அரசு வேலை அளிப்பதும், கனடாவில் இந்துக்கள் மற்றும் இந்து கோயில்கள் மீதான காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறைக்கு உதவுவதும் என்றும், கனடா அரசு இந்தியாவுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்துள்ளது.

கனடாவில் வரும் தேர்தலில் வெற்றி பெற, சீக்கியர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் அதன் விளைவுகள் ஆபத்தானதாக உள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் உடனான கனடா மற்றும் அமெரிக்காவின் உறவு, இன்னமும் அந்நாடுகள் தீவிரவாதிகளையே சுய லாபத்துக்கு பயன்படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சர்வதேச அரங்கில், வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க, காலிஸ்தான் தீவிரவாதிகளை மேற்குலக நாடுகள் ஆதரிக்கின்றன என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இந்த சூழலில், இந்தியாவின் உள்விவகாரங்களில் அந்நிய தலையீட்டைத் தடுத்து, தனது இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டிய நேரத்தில் இந்தியா உள்ளது.

கனடாவை, தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அரசு என்று முத்திரை குத்திய இந்தியா, இந்தியர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிரவாதிகளுக்கு, உலகின் எந்த நாடும் உடந்தையாக இருப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்பதையும் ஆணித்தரமாக சொல்லி வருகிறது.

இந்நிலையில் தெற்கில் உள்ள நாடுகளை ஒன்றிணைத்து, அவர்களின்
முன்னுரிமைகள் மற்றும் வெவ்வேறு பிரச்னைகள் தொடர்பாக ஒரு பொதுவான
தளத்தை உருவாக்கவும், பிரதமர் மோடி குளோபல் சவுத் என்ற அமைப்பை முன்னெடுத்திருக்கிறார். புவி சார் அரசியலில் இந்தியா ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

Tags: khalistanUnited Statesthird largest economymilitantsinternational relationsPM ModiIndiarussiaCanada
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைன் மீது தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்து போரிடும் வடகொரியா – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜார்க்கண்ட் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் – 66.48 % வாக்குப்பதிவு!

Related News

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies