அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!
Aug 19, 2025, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!

Web Desk by Web Desk
Nov 27, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நிலக்கரி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்களை உருவாக்கத்  திட்டமிட்டுள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி  தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிஅளித்த பதிலில்,

சிங்கரேனி நிலக்கரி சுரங்க நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல் ) 2 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி அமைச்சகம் மொத்தம் 175 நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இவற்றில் 65 நிலக்கரி தொகுதிகள் சுரங்க அனுமதிகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 54 தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.

சுரங்கப்பணிகளுக்கு முன்னரும், பின்னரும், ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைப்பதற்காக, ஒவ்வொரு திட்டத்திற்கும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில்,  சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்  தயாரிக்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு திட்டத்தை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது.

2006-ம் ஆண்டு அறிவிப்பின்படி, விசாரணைகள் உட்பட பொது ஆலோசனையும் சுற்றுச்சூழல் சான்றிதழ் நடைமுறையின் ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் தணிவிப்பு நடவடிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் விதிக்கிறது.

அவை பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படி இணக்கங்கள் முறையாக தெரிவிக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், உடைமையாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அதற்கான இழப்பீடு நிறுவனத்தின் நடப்பிலுள்ள கொள்கையின்படி வழங்கப்படுகிறது. மேலும், நிலம் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், மாநில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையும் கருத்தில் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: 36 new coal projects in next 5 years!coal
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தலைவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆளுநர்!

Next Post

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு! – தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies