பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!
Sep 14, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

Manikandan by Manikandan
Jan 23, 2026, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதுகாப்பு தளவாட இறக்குமதியாளராக இருந்துவந்த இந்தியா கடந்த 11 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் புதிய மைல்கல்லாக ஆர்மீனியாவுக்கு பினாகா ராக்கெட் அமைப்பு அனுப்பபட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மல்டி பேரல் ராக்கெட் ஏவுகணைகளை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஏற்கெனவே DRDO உருவாக்கியுள்ள உலகின் மிகச் சிறந்த ராக்கெட் அமைப்புகளின் ஒன்றாக பினாகா ராக்கெட் அமைப்பை ஆர்மேனியா கொள்முதல் செய்வதற்கு 2022 ஆம் ஆண்டு சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதன்படி பினாகா ராக்கெட் அமைப்பின் முதல் தொகுதி நாக்பூரில் இருந்து ஆர்மேனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பினாகா ஏவுகணைகளின் ஏற்றுமதி உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு சான்றாகும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் 1,000 கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி சுமார் 24,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் 2014-ல் 46,425 கோடி ரூபாயில் இருந்த உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி 1.51 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பினாகா MK-1 மேம்படுத்தப்பட்ட ராக்கெட் அமைப்பை இந்திய இராணுவத்தில் சேர்த்துள்ள நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அதைவிட மேம்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பை இராணுவத்தில் சேர்க்க திட்டமிடப் பட்டுள்ளது.

சிவபெருமான் பயன்படுத்திய மிகவும் சக்தி வாய்ந்த வில்லின் பெயர் தான் பினாகா. பினாகா என்று பெயர் சூட்டப் பட்டுள்ள இந்த ராக்கெட் அமைப்பு இந்திய இராணுவத்துக்கு மிகப்பெரிய போர் ஆற்றலை வழங்கியுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு உயர்ந்த மலைப் பகுதிகளில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ப 45 கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

தொடர்ந்து, 120 கிலோமீட்டர் முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வகையில் இந்த பினாகா அமைப்பு மேம்படுத்தப்பட்டது. இந்த புதிய பினாகா Multi Barrel Rocket Launcher அமைப்பு, மிக குறுகிய நேரத்தில் அதிக இலக்குகளை அழிக்கக்கூடியதாகும்.

வெறும் 44 விநாடிகளில் 72 ராக்கெட்டுகளை ஏவி, வெவ்வேறு இலக்குகளைத் தாக்கக் கூடிய அதிநவீன அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 250 கிலோ எடையுள்ள வெடிமருந்துகளைச் சுமந்து சென்று எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளையும் அழிக்க வல்லதாகும்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு கடும் எச்சரிக்கையாக மாறியுள்ள இந்த பினாகா ராக்கெட் அமைப்பை ஆர்மேனியா கொள்முதல் செய்துள்ளதைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் பினாகா ராக்கெட் அமைப்பை கொள்முதல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்திய பாதுகாப்புத் துறைக்கான சீர்திருத்தங்களின் ஆண்டாக கடந்த ஆண்டை இந்தியா அறிவித்தது. அதன்படி, சைபர், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஹைப்பர்சோனிக்ஸ் மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய தளங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தது.

உலகளவில் ராணுவத்துக்கு செலவிடும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். மொத்த 6.81 லட்சம் கோடி ரூபாய்க்கான ராணுவ பட்ஜெட்டில் 2.67 லட்சம் கோடி ரூபாயை நவீனமயமாக்கலுக்கு இந்தியா ஒதுக்கியுள்ளது.

உள்நாட்டு கொள்முதல் மற்றும் தேவையான இறக்குமதிகளுக்கு இடையில் சமமாக இந்த நவீனமயமாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக அதிகரித்துள்ள மத்திய அரசு, உலகளாவிய நிறுவனங்களை விற்பனை நிறுவனங்களாக மட்டும் பார்க்காமல், கூட்டு தயாரிப்பு நிறுவனங்களாகவும் மாற்றியுள்ளது.

​​நாட்டின் பாதுகாப்புத் தேவைகளில் சுமார் 65 சதவீத தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப் படுகிறது. செலவு குறைந்த மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் சர்வதேச நாடுகளால் பெரிதும் விரும்பப் படுகின்றன.

அதன் தொடக்கமாகவே அர்மேனியாவுக்கான பினாகா ராக்கெட் அமைப்பின் ஏற்றுமதி அமைந்துள்ளது. பாதுகாப்பு ஏற்றுமதி என்பது வெறும் வருமானத்துக்கான வழிமுறை மட்டுமல்ல நாட்டின் இராஜதந்திர செல்வாக்கு என்பதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உலக அளவில் நிரூபித்துள்ளது.

குறிப்பாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை உற்பத்தி முடிவுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய வரலாற்று சாதனையாகவே அமைந்துள்ளது.

Tags: PinakaIndiaindian armydrdoArmeniaPinaka missile
Share
Tweet
SendShare
Previous Post

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

Next Post

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies