அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!
Jul 29, 2026, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நிலக்கரி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்களை உருவாக்கத்  திட்டமிட்டுள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி  தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிஅளித்த பதிலில்,

சிங்கரேனி நிலக்கரி சுரங்க நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல் ) 2 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி அமைச்சகம் மொத்தம் 175 நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இவற்றில் 65 நிலக்கரி தொகுதிகள் சுரங்க அனுமதிகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 54 தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.

சுரங்கப்பணிகளுக்கு முன்னரும், பின்னரும், ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைப்பதற்காக, ஒவ்வொரு திட்டத்திற்கும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில்,  சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்  தயாரிக்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு திட்டத்தை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது.

2006-ம் ஆண்டு அறிவிப்பின்படி, விசாரணைகள் உட்பட பொது ஆலோசனையும் சுற்றுச்சூழல் சான்றிதழ் நடைமுறையின் ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் தணிவிப்பு நடவடிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் விதிக்கிறது.

அவை பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படி இணக்கங்கள் முறையாக தெரிவிக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், உடைமையாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அதற்கான இழப்பீடு நிறுவனத்தின் நடப்பிலுள்ள கொள்கையின்படி வழங்கப்படுகிறது. மேலும், நிலம் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், மாநில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையும் கருத்தில் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: 36 new coal projects in next 5 years!coal
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தலைவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆளுநர்!

Next Post

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு! – தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies