அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!
Jan 24, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 03:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நிலக்கரி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 36 புதிய நிலக்கரி திட்டங்களை உருவாக்கத்  திட்டமிட்டுள்ளது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி  தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம்  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிஅளித்த பதிலில்,

சிங்கரேனி நிலக்கரி சுரங்க நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல் ) 2 புதிய நிலக்கரி சுரங்கங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

நிலக்கரி அமைச்சகம் மொத்தம் 175 நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இவற்றில் 65 நிலக்கரி தொகுதிகள் சுரங்க அனுமதிகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 54 தற்போது செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலக்கரி சுரங்கங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் அமைந்துள்ளன.

சுரங்கப்பணிகளுக்கு முன்னரும், பின்னரும், ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்களை குறைப்பதற்காக, ஒவ்வொரு திட்டத்திற்கும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில்,  சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்  தயாரிக்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு திட்டத்தை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது.

2006-ம் ஆண்டு அறிவிப்பின்படி, விசாரணைகள் உட்பட பொது ஆலோசனையும் சுற்றுச்சூழல் சான்றிதழ் நடைமுறையின் ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும்போது குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் தணிவிப்பு நடவடிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் விதிக்கிறது.

அவை பல கட்டங்களாக அமல்படுத்தப்படுகின்றன. விதிமுறைகளின்படி இணக்கங்கள் முறையாக தெரிவிக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், உடைமையாக்கம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, அதற்கான இழப்பீடு நிறுவனத்தின் நடப்பிலுள்ள கொள்கையின்படி வழங்கப்படுகிறது. மேலும், நிலம் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், மாநில ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கையும் கருத்தில் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags: 36 new coal projects in next 5 years!coal
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தலைவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆளுநர்!

Next Post

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு! – தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு!

Related News

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies