கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் - அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
Mar 18, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

Murugesan M by Murugesan M
Nov 28, 2024, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட் அவுட் கலாச்சாரத்திற்கு முதலமைச்சர் கெட்அவுட் சொல்லிய பிறகும், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள பெரியார் சிலை கடந்த 2006-ல் சேதப்படுத்தப்பட்டது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பலர் மீது ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : பெரும்பான்மையான இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார்சிலையை அகற்றவேண்டும் என்கிற  கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

பொதுஇடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தமிழகத்தில் பேனர் மற்றும் சிலை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது மேலும் பேனர்கள், கட்டவுட், பிரியாணி விருந்துகள் என உதயநிதி விளம்பரமும் அதிகரித்துள்ளது, இது நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும், முரணாகவும் உள்ளது.

கட்அவுட் கலாச்சாரத்திற்கு கெட்அவுட் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியநிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அதேபோன்று நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும்  முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை பல இடங்களில் திறக்கப்பட்டு உள்ளதும் ஏற்கத்தக்கது அல்ல, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மேலும் கோவில் முன்பு கடவுள் இல்லை என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Tags: arjun sampathhindu makkal katchiUdhayanidhi Stalin's birthdaybanner for udhayanidhi
ShareTweetSendShare
Previous Post

புயல் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

Next Post

பெண்கள் அதிக எண்ணிக்கையில் ராணுவத்தில் சேர முன் வர வேண்டும் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Related News

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல்- மத்திய அரசு

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்..ஆதவ் அர்ஜுனாவிற்கு நடிகர் ரஜினி காந்த் ரிப்ளை

மீண்டும் வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அதிபர்

நேட்டோ நாடுகள் மீது அதிபர் ட்ரம்ப் கோபம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies