கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் - சிறப்பு தொகுப்பு!
Oct 6, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 19, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன.
இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குளறுபடி செய்திருப்பது அப்பகுதி மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா, பல தசாப்தங்களாகவே தங்கள் மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தமிழகத்தை குப்பை கொட்டும் தளமாக பயன்படுத்தி வருகிறது.

அண்மையில் நெல்லை நடுக்கல்லூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டன. இது குறித்து நவம்பர் 11-ம் தேதியே சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், கேரள குப்பை கழிவுகள் விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் போலீசார், அந்த புகாரை வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், ஊடகங்களில் இதுகுறித்த செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாவதை உணர்ந்த போலீசார், 37 நாட்களுக்குப் பிறகு அவசர அவசரமாக கடந்த திங்கட்கிழமை புகார் மனுவை பெற்று, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

அதில் புகாரளித்த நபரால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காலதாமதமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எப்.ஐ.ஆரில் எந்த ஒரு இடத்திலும் மருத்துவக் கழிவுகள் எனும் வார்த்தையே இடம் பெறாதது அப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இதனிடையே தமிழகத்தை கேரளா குப்பைக் கிடங்காக பயன்படுத்தி வருவதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், குப்பைகள் கொட்டப்படுவதை திமுக அரசு தடுக்காவிட்டால், அந்த குப்பைகள் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு சென்று
கொட்டப்படும் என எச்சரித்திருந்தார்.

நடுக்கல்லூரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவ இடத்தை, நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பேசிய அவர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கனிமவளங்களை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் லாரிகள், திரும்பும் வழியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக குற்றம்சாட்டினார்.

கேரளாவில் இருந்து தமிழகம் வர இரு வேறு இடங்களில் சோதனை சாவடிகள் உள்ள நிலையிலும், மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்திற்குள் கொட்டப்பட்டு வருவதாகவும் தயாசங்கர் கூறினார்.

மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த உலக அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சர்வசாதாரணமாக தமிழக எல்லைகளுக்குள் அவை கொட்டப்படுவது மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக வழிவகை செய்துள்ளது.

இதுகுறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கேரளாவுக்குள் சென்று குப்பைகளை கொட்டுவோம் என பாஜகவினர் கூறியுள்ளனர். இதன் மூலம் ஏதேனும் சட்ட – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு திமுக அரசே பொறுப்பு எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலேனும் எல்லையோர மாவட்டங்களில் குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்…

 

Tags: medical wastegarbage dumpswasted dumpedSudthamalli police stationNadukallurKeralaTamil NaduNellai
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!

Next Post

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies