கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் - சிறப்பு தொகுப்பு!
Jun 14, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் இருந்து வரும் கழிவுகள் : குப்பை கிடங்காக மாறும் தமிழக எல்லையோர கிராமங்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படும் கழிவுகளால், தமிழக எல்லையோர மாவட்டங்கள் குப்பைக் கிடங்காக மாறி வருகின்றன.
இதுகுறித்த முதல் தகவல் அறிக்கையில் போலீசார் குளறுபடி செய்திருப்பது அப்பகுதி மக்களை கொந்தளிக்க செய்துள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா, பல தசாப்தங்களாகவே தங்கள் மாநிலத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தமிழகத்தை குப்பை கொட்டும் தளமாக பயன்படுத்தி வருகிறது.

அண்மையில் நெல்லை நடுக்கல்லூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டன. இது குறித்து நவம்பர் 11-ம் தேதியே சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், கேரள குப்பை கழிவுகள் விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் போலீசார், அந்த புகாரை வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில், ஊடகங்களில் இதுகுறித்த செய்தி வெளியானது. இந்த விவகாரம் பூதாகரமாவதை உணர்ந்த போலீசார், 37 நாட்களுக்குப் பிறகு அவசர அவசரமாக கடந்த திங்கட்கிழமை புகார் மனுவை பெற்று, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

அதில் புகாரளித்த நபரால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காலதாமதமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், எப்.ஐ.ஆரில் எந்த ஒரு இடத்திலும் மருத்துவக் கழிவுகள் எனும் வார்த்தையே இடம் பெறாதது அப்பகுதி மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.

இதனிடையே தமிழகத்தை கேரளா குப்பைக் கிடங்காக பயன்படுத்தி வருவதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், குப்பைகள் கொட்டப்படுவதை திமுக அரசு தடுக்காவிட்டால், அந்த குப்பைகள் மீண்டும் கேரளாவுக்கே கொண்டு சென்று
கொட்டப்படும் என எச்சரித்திருந்தார்.

நடுக்கல்லூரில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவ இடத்தை, நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது பேசிய அவர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கனிமவளங்களை ஏற்றிக் கொண்டு கேரளா செல்லும் லாரிகள், திரும்பும் வழியில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாக குற்றம்சாட்டினார்.

கேரளாவில் இருந்து தமிழகம் வர இரு வேறு இடங்களில் சோதனை சாவடிகள் உள்ள நிலையிலும், மருத்துவ மற்றும் இறைச்சிக் கழிவுகள் தமிழகத்திற்குள் கொட்டப்பட்டு வருவதாகவும் தயாசங்கர் கூறினார்.

மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த உலக அளவில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சர்வசாதாரணமாக தமிழக எல்லைகளுக்குள் அவை கொட்டப்படுவது மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாக வழிவகை செய்துள்ளது.

இதுகுறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கேரளாவுக்குள் சென்று குப்பைகளை கொட்டுவோம் என பாஜகவினர் கூறியுள்ளனர். இதன் மூலம் ஏதேனும் சட்ட – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு திமுக அரசே பொறுப்பு எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலேனும் எல்லையோர மாவட்டங்களில் குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்…

 

Tags: Tamil NaduNellaimedical wastegarbage dumpswasted dumpedSudthamalli police stationNadukallurKerala
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்!

Next Post

நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies