நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 04:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன் ஒருபகுதியாக குளத்தூரில் இருந்து நைனார் கோவில் வரை சுமார் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய 60 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்போது பணிகள் முடியும் என 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.

அப்பகுதிகளில் விளையும் வேளாண் பொருட்களை விற்பனை செய்ய ராமநாதபுரத்திற்கோ அல்லது பரமக்குடிக்கோ கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பிரதான சாலையே படுமோசமாக உள்ளதால், விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்குள் காய்கள் கனிந்து விடக் கூடிய சூழல்தான் அங்கு நிலவுகிறது…

பணி நடைபெறும் சாலையில் ஒரு வாகனம் செல்லும்போது கிளம்பும் தூசி அடங்குவதற்கு சுமார் 5 நிமிடமாவது ஆவதாகவும்,  ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சாலை கரடு முரடாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் துயரமும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவிக்கு அழைத்தால், இந்த சாலை வழியாக வருவதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே தயக்கம் காட்டுவதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சாலைப் பணி விவகாரத்தை அதிகாரிகள் காதுகளுக்குக் கொண்டு சென்றால், கண்டுகொள்ளவே இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்…

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜா, “பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்திற்குள் தார் பரப்பும் பணி தொடங்கி விரைவாக பணிகள் முடிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

3 ஆண்டுகளுக்கு மேலாக நத்தை வேகத்தில் நடைபெறும் சாலைப் பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுவட்டார கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: road constructionRamanathapuram East Coast Roadfour laneKulathur to Nainar KovilMadurairamanathapuramsivagangaMelur
ShareTweetSendShare
Previous Post

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் – வீடு வீடாக நடத்த சீமான் வலியுறுத்தல்!

Next Post

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies