நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 20, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன் ஒருபகுதியாக குளத்தூரில் இருந்து நைனார் கோவில் வரை சுமார் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய 60 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்போது பணிகள் முடியும் என 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.

அப்பகுதிகளில் விளையும் வேளாண் பொருட்களை விற்பனை செய்ய ராமநாதபுரத்திற்கோ அல்லது பரமக்குடிக்கோ கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பிரதான சாலையே படுமோசமாக உள்ளதால், விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்குள் காய்கள் கனிந்து விடக் கூடிய சூழல்தான் அங்கு நிலவுகிறது…

பணி நடைபெறும் சாலையில் ஒரு வாகனம் செல்லும்போது கிளம்பும் தூசி அடங்குவதற்கு சுமார் 5 நிமிடமாவது ஆவதாகவும்,  ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சாலை கரடு முரடாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் துயரமும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவிக்கு அழைத்தால், இந்த சாலை வழியாக வருவதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே தயக்கம் காட்டுவதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சாலைப் பணி விவகாரத்தை அதிகாரிகள் காதுகளுக்குக் கொண்டு சென்றால், கண்டுகொள்ளவே இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்…

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜா, “பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்திற்குள் தார் பரப்பும் பணி தொடங்கி விரைவாக பணிகள் முடிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

3 ஆண்டுகளுக்கு மேலாக நத்தை வேகத்தில் நடைபெறும் சாலைப் பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுவட்டார கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: road constructionRamanathapuram East Coast Roadfour laneKulathur to Nainar KovilMadurairamanathapuramsivagangaMelur
Share
Tweet
SendShare
Previous Post

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் – வீடு வீடாக நடத்த சீமான் வலியுறுத்தல்!

Next Post

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies