அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணாப்பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து  மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை  காலணி அணிய மாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும்  48 நாட்களுக்கு  விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவையில் உள்ள வீட்டின் முன்பு 6 முறை சாட்டையால் அடித்து அண்ணாமலை தனது போராட்டத்தை தொடங்கினார். அப்போது வெற்றி வேல், வீரவேல் என பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது சாட்டையை தருமாறும் தாங்கும் அடித்து கொள்வதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாட்டையடி தனக்காக அல்ல, சமூகத்தில் உள்ள அவலங்களுக்காக என தெரிவித்தார்.  இந்த போராட்டம் தனி மனித போராட்டம் அல்ல என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், திமுக ஆட்சியில் இருந்து அகலும் வரை காலணி அணியபோவதில்லை என தெரிவித்தார்.

“FIR வெளியானதன் மூலம் மாணவியின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவால் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுவதாகவும், எனவே பாஜக போராட்டத்தின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணாமலை கூறினார்.

கண் முன்னால் அடுத்த தலைமுறை அழித்து கொண்டு இருப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம். கல்வியின் தரம் கீழே வர ஆரம்பித்து இருக்கிறது. போராக இருந்தாலும் கூட ஒரு பெண்ணின் மீது கை வைக்க கூடாது என்பது மண்ணின் மரபு. வரும் காலங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்த போகிறோம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

 

Tags: chennai policeAnna University campusstudent sexual assaultAnnamalai lashes himself with a whipஅண்ணாமலை சாட்டையடி போராட்டம்annamalaiDMKAnna Universitytamilnadu government
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

பயணிகள் 7 கிலோவுக்கு மேல் கைகளில் சுமைகளை எடுத்துச் செல்லக்கூடாது – சிவில் விமான பாதுகாப்பு பணியகம் அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies