அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் - முழு விவரம்!
Jan 14, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் – முழு விவரம்!

Murugesan M by Murugesan M
Dec 28, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.. சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததுடன் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் முக்கிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜக, அதிமுக தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் காவல்துறை தாக்கல் செய்தது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே தவறு இருப்பதுபோல் FIR உருவாக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், பெண்ணின் பெயரை ஏன் வெளியிட்டீர்கள் எனவும் வினவினர்..

இதுபோன்ற காரணங்களால் மக்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வருவதற்கே பயப்படும் நிலை உள்ளதாகவும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் லட்சுமி நாராயணன் கவலை தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR கசிந்தது எப்படி? எனவும், முடக்கப்பட்ட பின் FIR-ஐ எப்படி மற்றவர்கள் பார்க்க முடியும் என்றும் அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், IPC-யில் இருந்து BNS சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR வெளியாகி விட்டதாக கூறினார்.

சிட்டிசன் போர்ட்டல் மூலம் FIR-ஐ 14 பேர் ஆன்லைனில் பார்த்துள்ளதாகவும், அவர்கள் செல்போன் எண்ணை சேகரித்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பேட்டியளித்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எல்லா குற்றச் சம்பவங்களுக்கும் பிரஸ்மீட் வைத்து காவல் ஆணையர் பதில் அளிக்கிறாரா? என வினவினர்.

காவல் ஆணையர் பேட்டி அளிக்க அனுமதி உள்ளதா? எனவும், யாரை பாதுகாக்க பேட்டி அளித்தார்? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுக்க காவல் ஆணையர் பேட்டி அளிக்கலாம் எனவும்,

அலுவல் ரீதியாக செய்தியாளர்களை சந்திக்கலாம், தனிப்பட்ட முறையில்தான் சந்திக்க கூடாது என்றும் வாதத்தை முன்வைத்தார். தற்போதைய புலன் விசாரணையின் அடிப்படையில் ஒருவர்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையர் கூறியதாக விளக்கம் அளித்த அவர், யாரையும் பாதுகாக்கவில்லை என்பதை விளக்கவே காவல் ஆணையர் பேட்டி அளித்ததாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் எனவும், 3 காவல்துறை உயர் அதிகாரிகளின் பெயர்களை வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

வழக்கின் புலன் விசாரணையை காவல் ஆணையரின் கீழ் பணிபுரியும் அதிகாரியிடம் இருந்து மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது எனக் கூறிய நீதிபதிகள், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விசாரணையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளான அய்வான் ஜமால், சினேகா, பிருந்தா ஆகிய மூவரின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்தது.  தொடர்ந்து, விசாரணை ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்குமாறும், தமிழக டிஜிபி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்…

பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவிக்கு உரிய மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனவும். மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவி படிப்பை தொடர்வதில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது எனவும், கல்வியை முடிக்கும் வரை அவரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டனர்.  அத்துடன் யுஜிசி நெறிமுறைகள்படி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ளது. இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

Tags: tamilnadu governmentchennai policetamilnadu policeAnna University campusstudent sexual assaultchennai high courtDMKAnna University
ShareTweetSendShare
Previous Post

சாட்டையடி போராட்டம் : பின்னணியும், முக்கியத்துவமும் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஆஸ்திரேலிய கிரிக்கெட் – ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies