சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கூட தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவில்லையே ஏன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசு புதிதாக ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசுக்கு ரூ.9.50 லட்சம் கோடி அளவிற்கு கடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான FIR வெளியான விவகாரத்தில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.