குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!
Jul 25, 2025, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரசவாதி என்றழைக்கப்படும் போகர் சித்தர் வடித்த நவபாஷான சிலைகள் அமைந்துள்ள இரு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலின் தனிச்சிறப்புகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

பொதுவாக கோயில்களில் உள்ள மூலஸ்தானத்தில் மரத்தாலான சிலை, கற்களால் செய்யப்பட்ட சிலை, ஐம்பொன், வெண்கலம் இத்தனை ஏன் தங்கத்தாலான சிலை இருப்பதைக் கூட நாம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள இரு முருகன் கோயில்களில் மட்டுமே நவபாஷானத்தால் ஆன அபூர்வ சிலைகள் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மற்றொன்று கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் திருக்கோயில். இந்த இரு சிலைகளுமே 18 சித்தர்களுள் தனிச்சிறப்பு பெற்றவராக கருதப்படும் போகரால் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

நாம் வழிபட நினைக்கும் எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் உடனே புறப்பட்டு சென்று மூலவரை தரிசித்துவிட முடியும். ஆனால், அந்த முருகனே நினைத்தால் மட்டும்தான், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் சென்று மூலவரை தரிசிக்க முடியுமாம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூம்பாறை கிராமத்தில்தான் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குழந்தை வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 12-ம் நூற்றாண்டில் சேரர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

நவ என்றால் ஒன்பது, பாஷானம் என்றால் விஷம்… ஆம் ஒன்பது விஷங்களை சரியான விகிதத்தில் கலந்து பல்வேறு மூலிகைகளை அதனுடன் சேர்த்தே, இந்த நவபாஷான சிலைகளை உருவாக்கியிருக்கிறார் இரசவாதத்தில் கைதேர்ந்த போகமாமுனிவர். அதனால்தான் இந்த கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அனைத்து தீர்த்தங்களும், பிணி தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒருமுறை அருணகிரிநாதர் இந்த கோயிலுக்கு முருகனை தரிசிக்க வந்தபோது, இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரை கொல்ல முயன்ற ஒரு அரக்கியை, குழந்தை உருவெடுத்து ஏமாற்றி அருணகிரிநாதரின் உயிரை முருகனே காப்பாற்றியதாகவும், ஞான திருஷ்டியில் இதை கண்ட அருணகிரிநாதர் அவரை குழந்தை வேலப்பராக போற்றியதாகவும் இக்கோயிலின் வரலாற்று சான்றுகளில் சொல்லப்பட்டுள்ளன.

அன்று முதல் தன்னிடம் வேண்டும் பக்தர்களின் பாவ வினைகளை போக்கி, குழந்தை வேலப்பராக அவர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் முருக பெருமான்.

Tags: tn templeChild labor temple! : If you think of Muruganeyou will get darshan!
ShareTweetSendShare
Previous Post

சொல்லி அடிக்கும் இஸ்ரோ! : விண்ணில் செயற்கைக்கோள்கள் இணைப்பு எப்படி நடக்கும்?

Next Post

டிரம்புக்கு சிறைதண்டனை? : ஆபாச நடிகை வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு

Related News

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies