இலக்கைத் தவற விட்ட PSLV-C62 ராக்கெட் : தொழில்நுட்ப கோளாறு காரணமா? - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலக்கைத் தவற விட்ட PSLV-C62 ராக்கெட் : தொழில்நுட்ப கோளாறு காரணமா? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 13, 2026, 07:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய PSLV-C62 தனது இலக்கை எட்ட முடியாமல் சுற்றுப்பாதையில் விட்டு விலகி சென்றுள்ளது. திட்டமிட்ட இலக்கைத் தவற விட்டது எப்படி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவின் சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 16 செயற்கைக் கோள்களை இஸ்ரோ PSLV-C62 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

இந்த செயற்கைக் கோள்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வடிவமைத்துள்ள இஓஎஸ் -என் 1 என்னும் அதிநவீன செயற்கைக்கோளும் ஒன்றாகும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 505 கிலோமீட்டர் தூரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில்நிலை நிறுத்தப் பட திட்டமிடப்பட்டிருந்தது.

PSLV-C62 ஏவுதளத்திலிருந்து சீறிப் பாய்ந்தது, திட்டமிட்டபடியே அதன் பூஸ்டர்களைக் கழற்றிவிட்டது. ஆனால், மூன்றாவது நிலைக்கு வந்த போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உற்சாகம் மங்கத் தொடங்கியது.

எதிர்பாராத விதமாக உருளத் தொடங்கிய PSLV-C62 ராக்கெட் பாதை மாறியதை டெலிமெட்ரி திரைகள் காட்டின. சமநிலையை இழந்த PSLV-C62 பம்பரம் போல அதன் அச்சிலேயே சுழன்றது.

எடுத்துச் சென்ற செயற்கைக் கோள்களைத் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதற்குப் பதிலாக, ராக்கெட் தனது பாதையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியது.

இரண்டு திட எரிப்பொருள் மற்றும் இரண்டு திரவ எரிப் பொருள் என நான்கு நிலைகளைக் கொண்ட PSLV-C62 ராக்கெட், மூன்றாவது நிலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுற்றுப் பாதையைத் தவற விட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விண்வெளியில் எரிபொருள் நிரப்பும் நிலையமான ஆயுள்சாட் செயற்கை கோள் மற்றும் பாதுகாப்புக்கு SUPER EYE என்று கூறப்படும் முக்கியமான அதிநவீன கண்காணிப்பு செயற்கை கோளும் PSLV-C62 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.

ஆரம்பத்திலிருந்து மூன்றாவது நிலையின் இறுதிவரை ராக்கெட்டின் செயல்பாடுகள் எதிர்பார்த்தப் படியே இருந்ததாக தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் நாராயணன் மூன்றாவது நிலை முடிவடையும் நேரத்தில் ராக்கெட்டில் அதிகப் படியான அதிர்வுகளைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தரவுகளைக் கவனமாக பகுப்பாய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் செலுத்திய PSLV-C61 திட்டமும் இதே போல் இயந்திரக் கோளாறால் வெற்றி பெறவில்லை.

போதுமான அழுத்தம் இல்லாமல் சுற்றுப்பாதை வேகத்தை அடைவதற்குத் தேவையான உந்துவிசையை இன்ஜினால் வழங்க முடியவில்லை என்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

இப்போது, இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட 16 செயற்கைக்கோள்கள் விண்ணில் தொலைந்துவிட்டதாக கூறப்படுகிறது. என்றாவது ஒருநாள், மீண்டும் பூமியின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து, விண்கற்களைப் போல எரிந்து சாம்பலாகும் என்று அஞ்சப் படுகிறது.

இது குறித்து, பின்னடைவுகள் எப்போதும் விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதிதான் என்றாலும் எவ்வளவு விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் மீண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம் என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் சூரிய மின்தகடு நிபுணருமான மனிஷ் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PSLV-C62 rocketPSLV-C62EOS-N1 satellitesun-synchronous orbitISROAndhra PradeshSriharikotaDefence Research and Development Organisation
Share
Tweet
SendShare
Previous Post

நாடாளுமன்ற நடவடிக்கை ஆவணங்கள் தாய்மொழியில் வழங்க ஏற்பாடு – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

Next Post

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் மோடி

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies