காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? - ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்
Apr 17, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

Manikandan by Manikandan
Jan 13, 2026, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

உலகப்புகழ்பெற்ற மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளும், காளையர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பேரிச்சம்பழம், வாழைப்பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, தேங்காய் என பல்வேறு உணவுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டு அவைகளுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பரிசுகளை வென்றுவரும் காளைகளை உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

டோக்கன் முறையாக இருந்தாலும் சரி, அதற்கு பின் தற்போது கடைபிடிக்கப்படும் ஆன்லைன் நடைமுறையாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான் ஆவணங்களையும் முழுமையாக சமர்ப்பித்த பின்பும் கூட இப்பகுதி காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து செல்லும் காளைகளுக்கு அனுமதி கிடைப்பதாக குறிப்பாக டி.வாடிப்பட்டி, டி.கன்னியமங்கலம், டிவி ரெங்கநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காளைகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அப்பகுதி இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மட்டுமே 30க்கும் அதிகமான காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், ஒருசில அரசியல் காரணங்களுக்காக அக்காளைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவது அப்பகுதி மக்களிடையேயும், காளைகளை வளர்ப்போர்களிடேயும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இன்றி தகுதிவாய்ந்த காளைகள் அனைத்தும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Maduraithenipongal2026 jallikattupongal 20262026 jallikattu bull
ShareTweetSendShare
Previous Post

நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பொங்கல் வாழ்த்து!

Next Post

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

Related News

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies