குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!
Apr 29, 2026, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 06:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரசவாதி என்றழைக்கப்படும் போகர் சித்தர் வடித்த நவபாஷான சிலைகள் அமைந்துள்ள இரு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலின் தனிச்சிறப்புகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

பொதுவாக கோயில்களில் உள்ள மூலஸ்தானத்தில் மரத்தாலான சிலை, கற்களால் செய்யப்பட்ட சிலை, ஐம்பொன், வெண்கலம் இத்தனை ஏன் தங்கத்தாலான சிலை இருப்பதைக் கூட நாம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள இரு முருகன் கோயில்களில் மட்டுமே நவபாஷானத்தால் ஆன அபூர்வ சிலைகள் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மற்றொன்று கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் திருக்கோயில். இந்த இரு சிலைகளுமே 18 சித்தர்களுள் தனிச்சிறப்பு பெற்றவராக கருதப்படும் போகரால் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

நாம் வழிபட நினைக்கும் எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் உடனே புறப்பட்டு சென்று மூலவரை தரிசித்துவிட முடியும். ஆனால், அந்த முருகனே நினைத்தால் மட்டும்தான், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் சென்று மூலவரை தரிசிக்க முடியுமாம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூம்பாறை கிராமத்தில்தான் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குழந்தை வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 12-ம் நூற்றாண்டில் சேரர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

நவ என்றால் ஒன்பது, பாஷானம் என்றால் விஷம்… ஆம் ஒன்பது விஷங்களை சரியான விகிதத்தில் கலந்து பல்வேறு மூலிகைகளை அதனுடன் சேர்த்தே, இந்த நவபாஷான சிலைகளை உருவாக்கியிருக்கிறார் இரசவாதத்தில் கைதேர்ந்த போகமாமுனிவர். அதனால்தான் இந்த கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அனைத்து தீர்த்தங்களும், பிணி தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒருமுறை அருணகிரிநாதர் இந்த கோயிலுக்கு முருகனை தரிசிக்க வந்தபோது, இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரை கொல்ல முயன்ற ஒரு அரக்கியை, குழந்தை உருவெடுத்து ஏமாற்றி அருணகிரிநாதரின் உயிரை முருகனே காப்பாற்றியதாகவும், ஞான திருஷ்டியில் இதை கண்ட அருணகிரிநாதர் அவரை குழந்தை வேலப்பராக போற்றியதாகவும் இக்கோயிலின் வரலாற்று சான்றுகளில் சொல்லப்பட்டுள்ளன.

அன்று முதல் தன்னிடம் வேண்டும் பக்தர்களின் பாவ வினைகளை போக்கி, குழந்தை வேலப்பராக அவர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் முருக பெருமான்.

Tags: tn templeChild labor temple! : If you think of Muruganeyou will get darshan!
ShareTweetSendShare
Previous Post

சொல்லி அடிக்கும் இஸ்ரோ! : விண்ணில் செயற்கைக்கோள்கள் இணைப்பு எப்படி நடக்கும்?

Next Post

டிரம்புக்கு சிறைதண்டனை? : ஆபாச நடிகை வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு

Related News

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்!

மதுரை சித்திரை திருவிழா – மீனாட்சியம்மனின் ‘திக் விஜயம்’ கோலாகலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies