குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!
Sep 17, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home பண்பாடு

குழந்தை வேலப்பர் திருக்கோயில்! : முருகனே நினைத்தால்தான் தரிசனம் கிடைக்கும்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 06:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரசவாதி என்றழைக்கப்படும் போகர் சித்தர் வடித்த நவபாஷான சிலைகள் அமைந்துள்ள இரு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலின் தனிச்சிறப்புகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!

பொதுவாக கோயில்களில் உள்ள மூலஸ்தானத்தில் மரத்தாலான சிலை, கற்களால் செய்யப்பட்ட சிலை, ஐம்பொன், வெண்கலம் இத்தனை ஏன் தங்கத்தாலான சிலை இருப்பதைக் கூட நாம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள இரு முருகன் கோயில்களில் மட்டுமே நவபாஷானத்தால் ஆன அபூர்வ சிலைகள் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மற்றொன்று கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் திருக்கோயில். இந்த இரு சிலைகளுமே 18 சித்தர்களுள் தனிச்சிறப்பு பெற்றவராக கருதப்படும் போகரால் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

நாம் வழிபட நினைக்கும் எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் உடனே புறப்பட்டு சென்று மூலவரை தரிசித்துவிட முடியும். ஆனால், அந்த முருகனே நினைத்தால் மட்டும்தான், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலுக்குச் சென்று மூலவரை தரிசிக்க முடியுமாம்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பூம்பாறை கிராமத்தில்தான் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த குழந்தை வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 12-ம் நூற்றாண்டில் சேரர் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

நவ என்றால் ஒன்பது, பாஷானம் என்றால் விஷம்… ஆம் ஒன்பது விஷங்களை சரியான விகிதத்தில் கலந்து பல்வேறு மூலிகைகளை அதனுடன் சேர்த்தே, இந்த நவபாஷான சிலைகளை உருவாக்கியிருக்கிறார் இரசவாதத்தில் கைதேர்ந்த போகமாமுனிவர். அதனால்தான் இந்த கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் அனைத்து தீர்த்தங்களும், பிணி தீர்க்கும் அருமருந்தாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஒருமுறை அருணகிரிநாதர் இந்த கோயிலுக்கு முருகனை தரிசிக்க வந்தபோது, இரவு நேரமானதால் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது அவரை கொல்ல முயன்ற ஒரு அரக்கியை, குழந்தை உருவெடுத்து ஏமாற்றி அருணகிரிநாதரின் உயிரை முருகனே காப்பாற்றியதாகவும், ஞான திருஷ்டியில் இதை கண்ட அருணகிரிநாதர் அவரை குழந்தை வேலப்பராக போற்றியதாகவும் இக்கோயிலின் வரலாற்று சான்றுகளில் சொல்லப்பட்டுள்ளன.

அன்று முதல் தன்னிடம் வேண்டும் பக்தர்களின் பாவ வினைகளை போக்கி, குழந்தை வேலப்பராக அவர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் முருக பெருமான்.

Tags: tn templeChild labor temple! : If you think of Muruganeyou will get darshan!
Share
Tweet
SendShare
Previous Post

சொல்லி அடிக்கும் இஸ்ரோ! : விண்ணில் செயற்கைக்கோள்கள் இணைப்பு எப்படி நடக்கும்?

Next Post

டிரம்புக்கு சிறைதண்டனை? : ஆபாச நடிகை வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு

Related News

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

தாக்குதலை தீவிரப்படுத்தும் ஹவுதி அமைப்பினர் : என்ன செய்யப்போகிறார் அதிபர் ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வலதுகரம் Cai Qi : உற்றுநோக்கப்படும் இந்திய வருகை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies