இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jun 6, 2025, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 7, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் நாட்களில் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி கோடிக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியது.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதே சீன நாட்டில் தற்போது அதிகளவில் பரவி வருவதால்தானோ என்னவோ, எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று இந்திய மக்கள் மனதில் கிலியை கிளப்பியுள்ளது.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்றழைக்கப்படும் இந்த தொற்று, மழைக்காலங்களில் பரவும் மற்ற வைரஸ் தொற்றுகளைப்போல காய்ச்சல், சளி, இருமல், சுவாச அசவுஹரியம், உடல் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். மற்றபடி உயிர் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதால், எச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இந்த எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் இந்த வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால், இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரைச் சேர்ந்த 3 வயது பெண் மற்றும் 8 மாத ஆண் குழந்தைகளிடம் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், 8 மாத ஆண் குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் மக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், “இது புதிய வைரஸ் தொற்று அல்ல, 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்ட சாதாரண வைரஸ் தொற்றுதான்” என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் பிரசன்ஜித் சௌத்ரி என்பவர், PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டதுதான் என்பதால், இதை எண்ணி மக்கள் கவலைப்பட அவசியமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் எனவும், சுவாச பிரச்சனை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ministry of Health and Family WelfareNCDCWHOchinaicmrHMPV virusHMPV virus infection
ShareTweetSendShare
Previous Post

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Next Post

அச்சம் தேவையில்லை – HMPV தொற்று பரவலை கண்காணித்து வருவதாக மா.சுப்பிரமணியன் தகவல்!

Related News

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies