பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2025, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போர் தாக்குதல்களை நிறுத்திச் சொல்லித் தலிபான்களிடம் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை ஆப்கான் அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வாரம் ஆப்கான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. மேலும் காந்தகாரில் வான்வழித் தாக்குதல்களிலும் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான்-ஆப்கான் எல்லைகளில் தாலிபான்கள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்கள் ஏற்பட்டன. ஆப்கானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, முதல்முறையாக அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த நேரத்தில், ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த மோதலில், 200-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்றதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மீண்டும் இருதரப்பினரும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தப்படுவதாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் 48 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காபூலின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தம்செய்வதாகப் பாகிஸ்தான்ன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஓட விட்ட தாலிபான்களின் வெற்றியை, ஆப்கான் மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தலிபான்களின் தளபதிகளைக் குதிரையின் மேலேற்றி ஊர்வலமாக அழைத்து வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பயத்தில் எல்லையை விட்டு ஓடிவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் பரிதாப நிலையை இந்த வீடியோவில் காண முடிகிறது.

எல்லைச் சாவடிகளைத் தாக்குவதையும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் கைப்பற்றுவதையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தலிபான்கwf அவமானப்படுத்துவதையும் வீடியோவில் காண முடிகிறது. கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் ஆடைகளைக் களைந்து தெருக்களில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பேண்டை கழற்றி அதைவெற்றிக்குக் கொடியாக சுழற்றி தாலிபான்கள் ஆட்டும் காட்சிகள் வேகமாக வைரலாகி வருகின்றன. ஏராளமான தாலிபான் ராணுவ வாகனங்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் விரைவில் முழு அளவிலான போர் மூளும் அபாயம்உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: pakistanWARpakistan newsDisaster haunts Pakistan: Screams from the Taliban as they deliver a mortal blow
Share
Tweet
SendShare
Previous Post

திமுக எனும் அரக்கனை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – எல்.முருகன் உறுதி!

Next Post

தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies