350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!
Jun 4, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

Murugesan M by Murugesan M
Oct 21, 2025, 08:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் நகரங்களை வேகமாக இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வந்தே பாரத் 4.O விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு… அதன் சிறப்பம்சங்கள் என்ன தற்போது பார்க்கலாம்.

இந்தியாவில் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், ரயில் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததோடு, பயணிகளுக்குப் புதுமையான அனுபவத்தையும் வழங்கியது. தற்போது மூன்றாம் தலைமுறை வந்தே பாரத் ரயில்கள், பயணிகளுக்குச் சிறந்த சேவையை வழங்கி வரும் நிலையில், அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.O அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற 16வது சர்வதேச ரயில்வே உபகரண கண்காட்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் ரயில்கள், தொழில்நுட்ப தரத்தின் அடிப்படையில், உலகின் சிறந்த ரயில்களுக்கு இணையாக இருப்பதாகக் கூறினார்.

வந்தே பாரத் 3.O ரயில்கள் மிகவும் வேகமானது, நவீனமானது என்றும், இது ஜப்பான், ஐரோப்பாவில் உள்ள ரயில்களோடு ஒப்பிடுகையில் வெறும் 52 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவதாகவும் தெரிவித்தார்.

குறைந்த சத்தத்தையும், அதிர்வையும் வந்தே பாரத் ரயில்களில் உணர முடிவதாகக் கூறிய ரயில்வே அமைச்சர், இது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட வேண்டும என்றும் கூறினார்.

அடுத்தக்கட்டமாக வந்தே பாரத் 4.O திட்டம் இன்னும் மேம்பட்டதாக நவீனத்துவமாக இருக்கும். புல்லட் ரயில்கள் போன்ற அதிவேக ரயில்களை இயக்க இந்தியாவில் பிரத்யேக வழித்தடங்கள் கட்டமைப்படும். புதிய வழித்தடங்களில் ரயில்கள் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.

2047-ம் ஆண்டுக்குள் அதிவேக ரயில்கள் மட்டுமே இயக்கப்படக் கூடிய 7000 கிலோ மீட்டர் நீள வழித்தடங்கள் உருவாக்கவும், இந்தியாவின் ரயில் அமைப்பை முற்றிலும் மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

வந்தே பாரத் 4.O ரயில்கள் மிகவும் நவீனத்துவமாக இருக்கும் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் இவ்வகை ரயில்கள் பிற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்தியாவை ரயில் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்ற உதவும். ரயில் தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் பொறியியலில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.

வந்தே பாரத் 4.O ரயில்கள் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுவதோடு, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: IndianewsindianrailwayTodayTrains will fly at a speed of 350 km: VANDE BHARAT 4.O is being introduced
ShareTweetSendShare
Previous Post

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

Next Post

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

Related News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன ருத்ரம்-2 ஏவுகணை – வெற்றிகரமாக பரிசோதனை!

அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் – கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வில் குளறுபடி ஏற்படுத்திய கல்வி மாஃபியா மீது கடும் நடவடிக்கை – தர்மேந்திர பிரதான் உறுதி!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு? – மம்தா கூட்டத்தை புறக்கணித்த 60 எம்எல்ஏக்கள்!

வணிக சிலிண்டர் விலை ரூ. 46 உயர்வு : வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!

Load More

அண்மைச் செய்திகள்

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!

மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? – அன்புமணி கேள்வி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சேலத்தில் பழுதடைந்ததால் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 9 அரசு பேருந்துகள் – பயணிகள் தவிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies