இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு - சிறப்பு தொகுப்பு!
Jul 27, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் நாட்களில் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி கோடிக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியது.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதே சீன நாட்டில் தற்போது அதிகளவில் பரவி வருவதால்தானோ என்னவோ, எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று இந்திய மக்கள் மனதில் கிலியை கிளப்பியுள்ளது.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்றழைக்கப்படும் இந்த தொற்று, மழைக்காலங்களில் பரவும் மற்ற வைரஸ் தொற்றுகளைப்போல காய்ச்சல், சளி, இருமல், சுவாச அசவுஹரியம், உடல் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். மற்றபடி உயிர் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதால், எச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இந்த எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் இந்த வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால், இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரைச் சேர்ந்த 3 வயது பெண் மற்றும் 8 மாத ஆண் குழந்தைகளிடம் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், 8 மாத ஆண் குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் மக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், “இது புதிய வைரஸ் தொற்று அல்ல, 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்ட சாதாரண வைரஸ் தொற்றுதான்” என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் பிரசன்ஜித் சௌத்ரி என்பவர், PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டதுதான் என்பதால், இதை எண்ணி மக்கள் கவலைப்பட அவசியமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் எனவும், சுவாச பிரச்சனை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: HMPV virusHMPV virus infectionMinistry of Health and Family WelfareNCDCWHOchinaicmr
ShareTweetSendShare
Previous Post

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Next Post

அச்சம் தேவையில்லை – HMPV தொற்று பரவலை கண்காணித்து வருவதாக மா.சுப்பிரமணியன் தகவல்!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies