இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு - சிறப்பு தொகுப்பு!
Apr 20, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் நாட்களில் உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவி கோடிக்கணக்கானோர் உயிரை பலிவாங்கியது.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். அதே சீன நாட்டில் தற்போது அதிகளவில் பரவி வருவதால்தானோ என்னவோ, எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று இந்திய மக்கள் மனதில் கிலியை கிளப்பியுள்ளது.

ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் என்றழைக்கப்படும் இந்த தொற்று, மழைக்காலங்களில் பரவும் மற்ற வைரஸ் தொற்றுகளைப்போல காய்ச்சல், சளி, இருமல், சுவாச அசவுஹரியம், உடல் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். மற்றபடி உயிர் அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்பதால், எச்.எம்.பி.வி வைரஸ் பரவுவதை எண்ணி மக்கள் அச்சப்பட வேண்டாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இந்த எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் இந்த வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால், இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட அறிக்கையில், பெங்களூரைச் சேர்ந்த 3 வயது பெண் மற்றும் 8 மாத ஆண் குழந்தைகளிடம் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 3 வயது பெண் குழந்தைக்கு உடல் நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், 8 மாத ஆண் குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தினரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் மக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், “இது புதிய வைரஸ் தொற்று அல்ல, 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்ட சாதாரண வைரஸ் தொற்றுதான்” என மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் பிரசன்ஜித் சௌத்ரி என்பவர், PTI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்டதுதான் என்பதால், இதை எண்ணி மக்கள் கவலைப்பட அவசியமில்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் தேவையற்ற வதந்திகளை பரப்பி மக்களை பீதியடையச் செய்ய வேண்டாம் எனவும், சுவாச பிரச்சனை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: HMPV virusHMPV virus infectionMinistry of Health and Family WelfareNCDCWHOchinaicmr
ShareTweetSendShare
Previous Post

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

Next Post

அச்சம் தேவையில்லை – HMPV தொற்று பரவலை கண்காணித்து வருவதாக மா.சுப்பிரமணியன் தகவல்!

Related News

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies