தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் "35 வயது சாபம்"!
Sep 12, 2026, 06:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

Murugesan M by Murugesan M
Oct 20, 2025, 08:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தொழிலாளர்களிடையே நிலவும் அதிருப்தி, பாகுபாட்டைச் சமாளிக்க சீனா 35 வயது சாபத்தை மாற்றத் திட்டம் தீட்டியுள்ளது. அது என்ன 35 வயது சாபம்….. விரிவாகப் பார்க்கலாம், இந்தச் செய்தித்தொகுப்பில்.

35 வயது சாபம் என்பது சீனாவின் பொதுவான சொற்றொடராகவே பொதுமக்கள் மனதில் ஆறாத வடுவாய் பதிந்துவிட்டது. சீனாவில் 35 வயதை எட்டியவர்களை வேலைக்கு அமர்த்தும் போக்கு குறைந்து வருவது அங்குள்ள தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.

அங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள், தொழிலாளர்கள் பணியமர்த்தும் வயதை 35 வயது எனக் கட்டுப்படுத்தியிருப்பதால், அங்கு 35 வயது என்பதே சாபமாகக் கருதப்படுகிறது. இது சீனா முழுவதும் தொழிலாளர்களின் முழக்கமாகவும் மாறியுள்ளது. வயதான மக்கள் தொகை என்பது சீனாவுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

மக்கள் தொகையைக் குறைக்க, ஒரு குழந்தை கொள்கை என்ற சீனாவின் முழக்கம், முப்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்ததன் காரணமாக நாட்டிற்கே அது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2035ம் ஆண்டில் குறைந்தபட்சம் 40 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது… இது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் தொகைக்குச் சமமான நிலை. அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் இந்தக் கொடூரமான விதிகளை பின்பற்றத் தொடங்கிவிட்டன.

இதனால் 30 வயது வரை வேலையைத் தேடாதவர்களுக்கு, வேலை கிடைப்பதில் சவாலான சூழலை ஏற்படுத்திவிடுகிறது. சீனாவில் வயது சார்பு என்பது புதிதல்ல என்றாலும், வேலைவாய்ப்புக்கான உரிமையில் இது சர்ச்சைகளைத் தூண்டுவதாக உள்ளது… கடந்த ஆகஸ்ட் மாதம் பிரபலமான, சில்லறை விற்பனை சந்தையான Pangdonglai-இல் கிட்டத்தட்ட 80 சதவிகித வேலைவாய்ப்புகள் 30 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் அல்லது குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதி என்ற வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று சீனாவில் உள்ள வேலைவாய்ப்புகளில் வயது பாகுபாடு காட்டப்படுவது அதிகரித்திருப்பதை அரசு தொலைக்காட்சியான CCTV வெளிப்படுத்தியது… இது நாடு முழுவதும் பெரும் தலைவலியாக மாறிப் போன நிலையில், சீனா புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறது.

வயது பாகுபாட்டை ஒழிக்க, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வயது வரம்பை 35-லிருந்து 43 ஆக உயர்த்தி புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 38 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்களின் வயது வரம்பு 40-லிருந்து 43 ஆக நீட்டிக்கப்பட்டுளளதாகவும் வெளியான அறிவிப்பு பலரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதைத் தாமதப்படுத்துவதற்கான, நாட்டின் முற்போக்கு அணுகுமுறைக்கு ஏற்ப, அடுத்த ஆண்டிற்கான தேசிய சிவில் சர்வீஸ் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பை சீனா சரியான முறையில் மாற்றியமைத்ததாகக் குளோபல் டைம்ஸ் அரசுச் செய்தித்தாள் பாராட்டியுள்ளது.

Tags: chinachina newsWill the workers' grievances be contained? : The "35-year curse" haunting Chinaசீனாவை துரத்தும் "35 வயது சாபம்"
Share
Tweet
SendShare
Previous Post

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

Next Post

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies