பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - அண்ணாமலை உறுதி!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் – அண்ணாமலை உறுதி!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையத்தில், ஒரே குடும்பத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்தில், 42 நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருக்கும் திமுக அரசைக் கண்டித்து, இன்று பொங்கலூர் கொடுவாய் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர்  செந்தில்வேல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

தொடர்ந்து சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில், தனியாக இருப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதையும், எந்த வழக்கிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, கடந்த டிசம்பர் 6 அன்று, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  தமிழக பாஜக சார்பாக கடிதம் எழுதினோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவுடன், சிபிஐ விசாரணைக்கு தமிழகத்திலிருந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்துவிட்டார் முதலமைச்சர்.

இதனால், இந்த வழக்கை சிபிஐ தன்னிச்சையாக விசாரிக்க முடியாமல், தமிழக அரசு அனுமதிக்காகக் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி ஒரு மாதம் கடந்தும், இன்னும் குற்றவாளிகளைக் கைது செய்யவோ, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவோ திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததால், பொங்கலூர் ஒன்றியத்தில், 50,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பொதுமக்களோடு ஆளுநரைச் சந்தித்து, மூவர் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக மாநில மாநிலப் பொதுச்செயலாளர் ஏபி.முருகானந்தம் , தமிழக பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் கரு.நாகராஜன், , மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து உழைத்து வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர் பகுதி தலைவர்கள் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம், இந்த வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்து, எந்தத் தவறும் செய்யாமல் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும்வரை,  தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tirupurpalladam murder casebjp protestDMK governmentBJP State President AnnamalaiPalladam
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு – அண்ணாமலை தலைமையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies