பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - அண்ணாமலை உறுதி!
Aug 21, 2025, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் – அண்ணாமலை உறுதி!

Web Desk by Web Desk
Jan 10, 2025, 09:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் மூவர் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையத்தில், ஒரே குடும்பத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்தில், 42 நாட்கள் ஆகியும், இன்னும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருக்கும் திமுக அரசைக் கண்டித்து, இன்று பொங்கலூர் கொடுவாய் பகுதியில் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர்  செந்தில்வேல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

தொடர்ந்து சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில், தனியாக இருப்பவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதையும், எந்த வழக்கிலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பதையும் கருத்தில் கொண்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவத்தை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, கடந்த டிசம்பர் 6 அன்று, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  தமிழக பாஜக சார்பாக கடிதம் எழுதினோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டவுடன், சிபிஐ விசாரணைக்கு தமிழகத்திலிருந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்துவிட்டார் முதலமைச்சர்.

இதனால், இந்த வழக்கை சிபிஐ தன்னிச்சையாக விசாரிக்க முடியாமல், தமிழக அரசு அனுமதிக்காகக் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சருக்குக் கடிதம் எழுதி ஒரு மாதம் கடந்தும், இன்னும் குற்றவாளிகளைக் கைது செய்யவோ, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவோ திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாததால், பொங்கலூர் ஒன்றியத்தில், 50,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பொதுமக்களோடு ஆளுநரைச் சந்தித்து, மூவர் படுகொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிக்கை வைக்கவிருக்கிறோம்.

பொதுக்கூட்டத்தில், தமிழக பாஜக மாநில மாநிலப் பொதுச்செயலாளர் ஏபி.முருகானந்தம் , தமிழக பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் கரு.நாகராஜன், , மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கத் தொடர்ந்து உழைத்து வரும் திருப்பூர் மாவட்டம், பல்லடம், பொங்கலூர் பகுதி தலைவர்கள் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிச்சயம், இந்த வழக்கில், குற்றவாளிகளைக் கைது செய்து, எந்தத் தவறும் செய்யாமல் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும்வரை,  தமிழக பாஜக தொடர்ந்து போராடும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: palladam murder casebjp protestDMK governmentBJP State President AnnamalaiPalladamTirupur
ShareTweetSendShare
Previous Post

பல்லடம் 3 பேர் கொலை வழக்கு – அண்ணாமலை தலைமையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

தமிழ்மொழியை அனைவரும் கற்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies