அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள
ஞானசேகரனின் நீதிமன்ற காவல், பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை, சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, சைதாப்பேட்டை 9வது நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிப்ரவரி மாதம் 7ம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.