குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடவுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில், தரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை புனித நீராடுகிறார். இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.