என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!
Jun 5, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 06:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா காசாவைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப், காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு ஜோர்டான் மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய கிழக்கின் சொர்க்கப்புரி காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்பின் திட்டம் என்ன? இதனால் இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் என்னவாகும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் கடந்த 15 மாதங்களுக்கும் பிறகு கத்தார், அமெரிக்க கூட்டு முயற்சியால் முடிவுக்கு வந்தது.

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு தரப்பும் பணயக் கைதிகளை படிப்படியாக விடுவித்து வருகிறது. இதுவரை 5 முறை பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.

மேலும், காசாவில் நடந்த போர் காரணமாக, புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்புவதற்கும் இஸ்ரேல் அனுமதிக்கிறது.

இதற்காக, வடக்கு மற்றும் தெற்கு காசா பகுதியை இணைக்கும் நெட்சாரிம் பாதையில் இருந்து தனது படைகளை இஸ்ரேல் திரும்ப பெற்றுள்ளது. அங்கிருந்த இஸ்ரேல் படைகள், காசாவின் கிழக்கு எல்லையில் உள்ள இஸ்ரேல் ராணுவ முகாமுக்குத் திரும்பியுள்ளன. இதனால், எந்தவித இஸ்ரேல் ராணுவ சோதனையும் இன்றி தெற்கு காசாவில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

42 நாட்கள் நீடிக்கும் வகையில் ஏற்பட்ட போர்நிறுத்தம் பாதிக்கும் மேல் நாட்களை கடந்து விட்டது. மிச்சம் இருக்கும் இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக, மேலும் சில நாட்கள் போர்நிறுத்தத்தை நீட்டிக்கவேண்டியது அவசியம். எனவே, இது தொடர்பாக இஸ்ரேல்- காசா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , காசாவை வாங்கி அமெரிக்காவுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அமைதியாக வாழ்வதற்கான இடமும் வீடும் கிடைத்தால், பாலஸ்தீனியர்கள் காசாவுக்குத் திரும்ப விரும்ப மாட்டார்கள் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.

எனவே ஜோர்டானும் எகிப்தும்,சவுதி அரேபியாவும் , காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு நிரந்தர புகலிடம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் முழுமையாக குடியேற்றப்பட்ட பிறகு, காசாவை அமெரிக்கா கையகப்படுத்தி பொருளாதார ரீதியாக காஸாவை மேம்படுத்தும் என்றும் உறுதிப்பட ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்பின் திட்டத்தை “புரட்சிகர, ஆக்கப்பூர்வமான பார்வை” என்று அழைத்த போதிலும், ஜோர்டானின் மன்னர் அப்துல்லா பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நிராகரிப்பதாகக் கூறினார்.

அதிபர் ட்ரம்பின் யோசனையை நிராகரித்த, ஹமாஸ் தலைவர் இஸ்ஸாத் அல்-ரிஷ்க், வாங்கவும் விற்கவும் கூடிய சொத்து அல்ல காசா, அது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீனியர்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றும் ட்ரம்பின் திட்டத்துக்குக் கண்டனம் தெரிவித்த சவுதி அரேபியா, காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிலிருந்து உலகை திசைதிருப்புவதற்கான முயற்சி என்று கூறியுள்ளது.

ஆத்திரமூட்டும் யோசனையை ட்ரம்ப் கூறியுள்ளதாக சொல்லும் கத்தார் அரசு. ட்ரம்பின் காசா திட்டம் சர்வதேச சட்டத்தை மீறுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு வந்த இஸ்ரேல் குழுவினரிடம், கத்தார் அரசு பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

டிரம்பின் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பால் ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தானவை என்றும், காசாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் முடிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே வரும் 27ஆம் தேதி, புதிய மற்றும் ஆபத்தான முன்னேற்றங்கள் என்ற தலைப்பில், அவசர அரபு உச்சி மாநாட்டை எகிப்து அறிவித்துள்ளது. முன்னதாக ஜோர்டானின் மன்னர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்கவே காசா மறுகட்டமைப்பு தீர்வை அதிபர் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ள ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அதிபரின் திட்டம் பிடிக்கவில்லை என்பவர்கள் தங்கள் திட்டத்துடன் மேசைக்கு வந்து பேசுங்கள் என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரோ அல்லது தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்க முயலும் ஒரு அரசியல்வாதியோ அல்ல. இப்போது அவர் உலகின் மிக சக்திவாய்ந்த நபராக அமெரிக்காவின் அதிபராக உள்ளார்.

இரண்டாவது முறையாக அதிபராகியுள்ள ட்ரம்பின் கருத்துக்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் உறுதியான கொள்கைகளைக் காட்டினாலும், ரியல் எஸ்டேட் பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் நடைபெறும் சூதாட்ட நகர்வுகளைப் போலவே இருக்கின்றன.

வேறொரு திட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட ட்ரம்ப் இப்படி கூறியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

காசாவை வாங்கும் ட்ரம்பின் அறிவிப்பை உலகம் கவனித்துக் கொண்டிருக்க, ஈரானுடன் சரிபார்க்கப்பட்ட அணுசக்தி அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை, ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

எப்படி பார்த்தாலும், அமெரிக்க அதிபர்ட்ரம்பின் காசா தொடர்பான நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் ஒரு முடிவற்ற போர் சூழலையே உருவாக்கியுள்ளது.

Tags: trump netanyahu gazatrump gazatrump gaza takeover plantrump gaza plantrump to do listtrump at the border latestthe humanist reporttrump netanyahu meetingtrump gaza plan livetrump gaza striptrump wants to takeover gazagaza under trump: exploring the controversial proposal!Donald Trumpthe truth about trump's gaza vision: what you need to know!Trumpthe planet dtrump newstrump netanyahuTrump administrationtrump gaza reactionWhat is the plan? What is the profit? : Trump trying to buy Gaza!
ShareTweetSendShare
Previous Post

தைப்பூச விழா சிறப்புகள், வரலாறு – சிறப்பு கட்டுரை!

Next Post

காலத்திற்கு ஏற்றவாறு AI தொழில்நுட்பத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

Related News

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

தாம்பரம் அருகே 40 சவரன் தங்க நகை கொள்ளை : தட்டி தூக்கிய போலீஸ்!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் : சுட்டு வீழ்த்தப்பட்ட ஒன்பது போர் விமானங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த ரவுடியின் மனைவி!

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies