புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?
Jul 2, 2025, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய கல்விக் கொள்கை சொல்வது என்ன?

Web Desk by Web Desk
Feb 19, 2025, 07:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டிய நிலையில் புதிய கல்விக் கொள்கையில் “மொழிகள்” குறித்து என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

புதிய கல்விக் கொள்கை எந்த அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் போது மொழிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில், பல மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் கற்பித்தல் மற்றும் கற்றுக் கொள்ளுதலில் மொழியின் திறமை என்ற அடிப்படையில் புதியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் திறந்தவெளி பள்ளிகளை மேம்படுத்தவும், அதில் மாநில மொழியிலான பாடப் புத்தகங்களை உருவாக்கவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் வகுப்பு வரை அல்லது 8ம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது அவர்களது வீட்டில் பேசும் மொழி அல்லது மாநில மொழியில் அனைத்து பாடங்களையும் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (Next) அதன் பின்னர், தாய்மொழியை மொழிப் பாடமாக கற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அறிவியல் உள்ளிட்ட அனைத்து பாட புத்தங்களையும் தாய்மொழியில் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு முதல் 8 வயது வரை குழந்தைகளுக்கு மொழிகளை கற்றுக் கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்றும், (Next) இந்த பருவத்தில் பல மொழிகளை கற்பதன் மூலம் அவர்களது அறிவாற்றல் (Cognitive benefits) பெருகும் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பல மொழிகளை கற்றுத் தரும் அதேசமயம் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்றுத் தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள மொழிகளை கற்றுத் தருவதற்காக நாடு முழுவதும் ஆசிரியர்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளும் எனவும், இந்திய மொழிகளை கற்றுக் கொள்ள ஏதுவாக வேறு ஒரு மாநிலத்தில் இருந்து ஆசிரியர்களை சேர்த்துக் கொள்ள மாநிலங்கள் தங்களுக்குள் ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்றும் புதிய கல்விக் கொள்கையில் யோசனை வழங்கப்பட்டுள்ளது.

தேச ஒற்றுமை, மாநிலங்களுக்கு இடையேயான ஒற்றுமை, மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாட்டின் பன்முக மொழி கலாசாரம் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் விதமாக மூன்று மொழிகள் என்ற கோட்பாடு தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.

அதே சமயம், மூன்று மொழிகள் என்பதை செயல்படுத்தும் போது, எந்த ஒரு மொழியும் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்றும் புதிய கல்விக் கொள்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று மொழிகளில் எதை தேர்ந்தெடுப்பது என்பதை மாநில அரசுகள் அல்லது மாணவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவர்களது தாய் மொழி மற்றும் ஆங்கிலத்தில் யோசனை செய்யவும், பேசவும் ஏதுவாக அறிவியியல் மற்றும் கணிதம் ஆகிய பாட புத்தகங்களை இரு மொழிகளிலும் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் திறமை வாய்ந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை உருவாக்கும் வண்ணம், மாநில சட்ட கல்லூரிகளில் ஆங்கிலத்துடன், அந்த மாநில மொழியில் பாடங்களை நடத்த வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் அரசு கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பாடங்களை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் உயர்கல்வி நிலையங்களில் தாய்மொழியில் பாடங்களை நடத்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

புதிய கல்விக் கொள்கையில் மொழிகள் குறித்து குறிப்பிட்டுள்ள எந்த ஒரு இடத்திலும் இந்தி மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பது கட்டாயமாக்கப்படும் என்றோ அல்லது திணிக்கப்படும் என்றோ குறிப்பிடப்படவில்லை.

Tags: Educationnational education policy indiaNational Education Policyindian education systemnew education policynew policy on educationEducation Ministrynew education policy tamil nadueducation policynew education policy 2020 in hindinational education policy 2020higher educationnew education policy 2020school educationnew education policy analysisபுதிய கல்விக் கொள்கைeducation in indiaWhat does the new education policy say?indian educationnational education policy analysis
ShareTweetSendShare
Previous Post

கும்பமேளா கூட்ட நெரிசல் : எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன – யோகி ஆதித்யநாத்

Next Post

அயோத்தியில் குவியும் பக்தர்கள் : பலம் பெற்ற பொருளாதாரம் – யோகி ஆதித்ய நாத் பெருமிதம்!

Related News

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies