தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாலைகளை தூய்மைப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுற்றுப்புறத்தை அனைவரும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சம்பல்பூரை தூய்மையாக வைத்திருக்க உறுதிமொழி ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.