தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஸ்ரீசைலத்தில் உள்ள இடது கரை கால்வாய் சுரங்கப்பாதை கடந்த 22-ஆம் தேதி இடிந்து விழுந்தது.
இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலையில், 6-வது நாளாக மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.