மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!
Oct 22, 2025, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்தார். விமானப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் உதான் யாத்ரீ கபே குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

விமான நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை பன்மடங்கு இருப்பது விமானப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் உதான் யாத்ரி கபே எனும் பெயரில் மலிவு விலை உணவகங்களை தொடங்க முடிவு செய்தது.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் உதான் யாத்ரி கபே மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய்க்கு அந்த கபேவில் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்கத்தா விமான நிலையத்தில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்த விமான போக்குவரத்து அமைச்சகம் சென்னை விமான நிலையத்திலும் கபே தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் டீ பத்து ரூபாய்க்கும், காபி இருபது ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர தண்ணீர் பாட்டில், சமோசா, வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும் குறைவாக விலையில் விற்பனை செய்யப்படுவதால் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மத்திய அரசின் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த உதான் யாத்ரீ கபேவில் உணவு வகைகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் சென்றாலே உணவுக்காக மட்டுமே பல ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், குறைந்த விலையில் தரமான உணவுப் பண்டங்களை வழங்கும் இந்த உதான் யாத்ரீ கபே திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் திட்டமாக அமைந்திருக்கிறது.

Tags: chennai airportQuality food at affordable prices: Udan Yatri Cafe!உதான் யாத்ரீ கபேதரமான உணவுவிமான போக்குவரத்துத்துறை
ShareTweetSendShare
Previous Post

காங்கோவில் மர்ம நோய் : ரத்த வாந்தி எடுத்த பலர் மரணம்!

Next Post

அயோத்தி ராமர் கோயில் மீது தாக்குதல் நடத்த சதி – இளைஞர் கைது!

Related News

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

Load More

அண்மைச் செய்திகள்

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies