நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்றிய குழந்தைவேலு உள்ளிட்டோர் பதவி உயர்வுகோரி 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது
ஆனால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் பதவி உயர்வு வழங்காததால், மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை வாபஸ் பெற்றால்தான், பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என பதிவாளர் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எந்த வற்புறுத்தலும் இல்லாமல் பதவி உயர்வு பட்டியலில் தங்களை இணைக்கக்கோரி பல்கலைக்கழக ஊழியர்கள் குழந்தைவேலு உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பதிவாளரை மார்ச் 7-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது