பிரம்மிக்க வைக்கும் பசுமைப் பயணம்!
Aug 7, 2026, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரம்மிக்க வைக்கும் பசுமைப் பயணம்!

Murugesan M by Murugesan M
Mar 3, 2025, 07:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபால் வரை பசுமை விழிப்புணர்வை மையப்படுத்தி மூன்று பெண்கள் 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் பசுமைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். மூன்று பெண்கள் மேற்கொண்ட பசுமைப் பயணங்களின் அனுபவங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

ரோட்டரி இண்டர்ன்நேசனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபால் வரை பசுமை விழிப்புணர்வை மையப்படுத்தி மூன்று பெண்கள் 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் வரை காரில் மேற்கொள்ளும் பசுமை விழிப்புணர்வு பயணம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது. நல்லி குழுமத்தின் நிறுவனர் பத்ம விபூஷன் நல்லி குப்புசாமி செட்டி மற்றும் சென்னை ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பின் ஆளுநர் மகாவீர் போத்ரா ஆகியோர் கொடியசைத்து இந்த பயணத்தை தொடங்கி வைத்தனர்.

ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி, சுசித்ரா, சரவண செல்வி ஆகியோருடன்பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய பசுமைப் பயணம் சரியாக 17 நாட்களுக்கு பிறகு மார்ச் 2 ஆம் தேதி நிறைவடைந்தது. வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பிய மூன்று பெண்களுக்கு பிரம்மாண்ட வரவேற்போடு பாராட்டு விழாவும் நடைபெற்றது.

அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த பசுமைப் பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது. பயணத்தின் வழியில் மரம் நடும் நிகழ்வுகளும், விதைகள் பரிமாறும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

15 மாநிலங்கள் மற்றும் 2 நாடுகளை கடந்து 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீடித்த இந்த பயணம் வெற்றியுடன் நிறைவடைந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார், இடைவிடாமல் வாகனத்தை இயக்கிய கோதங்கி சுசித்ரா

தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்கள் மற்றும் நேபாளத்திலும் பசுமைப் பயணத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பும் முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பசுமை வனத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பதாக கூறுகிறார் பயணம் மேற்கொண்ட மற்றொரு பெண் சரவண செல்வி.

தமிழ்நாட்டை வனச்சோலையாக மாற்ற பல்வேறு அமைப்புகள் பல்வேறு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தாலும் ரோட்டரி இண்டர்நேசனல் அமைப்பு முன்னெடுத்திருக்கும் இந்த புதுவித முயற்சி அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: A breathtaking green journey!
Share
Tweet
SendShare
Previous Post

“ஆரியர்கள் வந்தேறிகள்” நச்சு கருத்தை திணிக்க பார்த்தவர் ஈ.வெ.ரா : ஆளுநர் ஆர்.என். ரவி

Next Post

பெரியார் பல்கலை. பதிவாளர் ஆஜராக உத்தரவு!

Related News

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

Load More

அண்மைச் செய்திகள்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies