மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு - பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!
Oct 2, 2025, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு – பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

Web Desk by Web Desk
Mar 6, 2025, 06:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து Puthiyakalvi.in என்னும் இணையதளத்தை, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதேபோல் சமகல்வி எங்கள் உரிமை என்ற பாடலை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும், கையெழுத்து இயக்கத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மும்மொழி விவகாரத்தில் முதலமைச்சர் மக்களை தவறான வழியில் கொண்டு செல்வது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டி கையெழுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திக்ககான பள்ளியை தமிழகத்தில் தொடங்கி வைத்தது ஈவெரா தான் என தெரிவித்தார்.

அதேபோல் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதே மொழியால் ஆட்சியை இழக்கப் போவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சமகல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமகல்வி எங்கள் உரிமை என எழுதி தொடங்கி வைத்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “தமிழ் வாழ்க, பாரதம் வாழ்க” என எழுதி தனது கையெழுத்தை பதிவு செய்தார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது கையெழுத்தை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக  சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, http://puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: signature drive with 1 crore people to garnerAminkaraiChennaiTamil Nadu BJPBJP State President Annamalaithree-language policy
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Next Post

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies