மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு - பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு – பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2025, 06:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து Puthiyakalvi.in என்னும் இணையதளத்தை, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதேபோல் சமகல்வி எங்கள் உரிமை என்ற பாடலை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும், கையெழுத்து இயக்கத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மும்மொழி விவகாரத்தில் முதலமைச்சர் மக்களை தவறான வழியில் கொண்டு செல்வது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டி கையெழுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திக்ககான பள்ளியை தமிழகத்தில் தொடங்கி வைத்தது ஈவெரா தான் என தெரிவித்தார்.

அதேபோல் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதே மொழியால் ஆட்சியை இழக்கப் போவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து சமகல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமகல்வி எங்கள் உரிமை என எழுதி தொடங்கி வைத்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “தமிழ் வாழ்க, பாரதம் வாழ்க” என எழுதி தனது கையெழுத்தை பதிவு செய்தார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது கையெழுத்தை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக  சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, http://puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: signature drive with 1 crore people to garnerAminkaraiChennaiTamil Nadu BJPBJP State President Annamalaithree-language policy
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Next Post

இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies