சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் சாலையோரம் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு அருகே ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
பெரிய குழாயின் ஓரத்தில் வீசப்பட்ட சடலத்தின் மீது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.