ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம் : தடம்மாறும் அமெரிக்கா - தடுமாறும் ஐரோப்பா!
Oct 1, 2025, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம் : தடம்மாறும் அமெரிக்கா – தடுமாறும் ஐரோப்பா!

Web Desk by Web Desk
Mar 11, 2025, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும் பேரங்களைப் பற்றியது என்று வெளிப்படையாக அறிவித்து கொண்ட ட்ரம்பின் பேரங்களால் சர்வதேச அரசியலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? மீண்டும் அமெரிக்காவை உலகின் முதன்மையான நாடாக கட்டமைக்கிறாரா ? அல்லது உலக வல்லரசான அமெரிக்காவுக்கு ட்ரம்ப் முடிவுரை எழுதுகிறாரா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப் தினமும் புதிய அறிவிப்புக்கள், புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறார். அவை எல்லாம் உலக ஒழுங்கை தலைகீழாக புரட்டி சீர்குலைத்துள்ளன.

குறிப்பாக, கிரீன்லாந்தை அமெரிக்கா விலை கொடுத்தாவது வாங்கி விடும், கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைப்போம், பனாமா கால்வாயின் உரிமை அமெரிக்காவுடையது என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்புகள், மேற்குலகில் ஒரு புதிய மன்ரோ கோட்பாட்டை ட்ரம்ப் உருவாக்குவதையே காட்டுகிறது.

அமெரிக்க குடியுரிமை தொடங்கி, உக்ரைனுக்கான ஆயுத மற்றும் நிதியுதவி வரை முந்தைய அதிபர் ஜோ பைடன் நிர்வாக முடிவுகளில் பலவற்றை ட்ரம்ப் ரத்து செய்திருக்கிறார்.

பாலஸ்தீனர்களுக்கு துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் புகலிடம் கொடுக்கவேண்டும், காசாவை அரபு நாடுகளின் சொர்க்கப்புரியாக மாற்றுவோம் எனவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும்,சீனாவின் வர்த்தக முறைகேடுகளைத் தடுக்கவும், சீனா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரிவிதிப்பை ட்ரம்ப் அறிவித்தார். பிறகு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை, அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக கூறினார். மேலும், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல், மற்ற நாடுகளுக்கும் பரஸ்பர வரி அமலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறிய ட்ரம்ப், உக்ரைனையும், பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளைத் தவிர்த்து, சவூதி அரேபியாவில் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்தார்.

அமைதியான முறையில் ரஷ்ய- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக, அமெரிக்கா வாக்களித்தது. இதன் மூலம், அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் கைகழுவியது. இது,அமெரிக்கா ஐரோப்பாவை விட்டு விலகி,ரஷ்யா பக்கம் திரும்புவதை வெட்டவெளிச்சமாகியது.

காசா பிரச்சனையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம், அமெரிக்கா மீது ஐரோப்பா அல்லாத நாடுகள் அதிருப்தி அடைந்தன.

தனது பதவியேற்பு உரையில், அமெரிக்காவின் 25 வது அதிபராக இருந்த மெக்கின்லியை, சிறந்த அதிபர் மற்றும் பிறவி தொழிலதிபர் என்று பாராட்டிய ட்ரம்ப், மெக்கின்லி புதிய வரிவிதிப்பின் மூலம்,செழிப்பான அமெரிக்காவை உருவாக்கினார் என்று கூறியிருந்தார்.

முன்னாள் அதிபர் மெக்கின்லி, அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த இறக்குமதி வரியை கொண்டு வந்தார். 1,500 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரியை 49.5 சதவீதமாக உயர்த்தினார். இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, அத்தியாவசிய உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்தது. அதனால் அமெரிக்க மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். அப்போது அமெரிக்கா வரலாறு காணாத பணவீக்கத்தைச் சந்தித்தது.

மெக்கின்லி ஆட்சிக்காலத்தில், வணிகத்தில் ஊழல், நிர்வாகத்தில் குளறுபடி, சமூக கொந்தளிப்பு மற்றும் சமத்துவமின்மை நிறைந்த நாடாகவே அமெரிக்கா இருந்தது.

மெக்கின்லியை தன் முன்மாதிரியாக கொண்டுள்ள ட்ரம்ப்பின் ஆட்சி காலம், மெக்கின்லியின் காலத்தில் காலத்தை விட வித்தியாசமானது.

1945ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததிலிருந்து மேற்கத்திய நாடுகளால் பின்பற்றப்பட்ட ஒரு உலகளாவிய ஒழுங்கை இப்போது ட்ரம்ப் மாற்றியமைத்திருக்கிறார்.

ஐரோப்பாவுடனான நட்புறவை ட்ரம்ப் முறிப்பது, 80 ஆண்டுகால அட்லாண்டிக் கூட்டணியை சீர்குலைக்கவும், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கையும் பலவீனப்படுத்துவும் செய்துவிடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

நேட்டோ என்ற அமைப்பு, தோல்வியடையும்போது ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ கூட்டணி பிளவுபடக்கூடும் என்றும் இது உலகளாவிய அதிகார வெற்றிடத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறார்கள். உலக அதிகார வெற்றிடத்தை, இந்தியா, சீனா போன்ற நாடுகள் கைப்பற்றக் கூடும்.

அமெரிக்காவின் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் எதிர்ப்பதில் யானையும் ட்ராகனும் போல இந்தியாவும் சீனாவும் இணைந்து முன்னணியில் இருக்க வேண்டும் என்று சீனா அழைப்பு விடுத்திருக்கிறது.

ட்ரம்பின் புதிய வெளியுறவுக் கொள்கையால், உலக நாடுகளின் மேல் அமெரிக்காவின் ஆதிக்கம் சரிந்துவிட்டது. அதனுடன் மேற்குலக நாடுகளின் உலகளாவிய கட்டுப்பாடும் தளர்ந்து விட்டது. மேலும் அது, இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கே மிகவும் சாதகமாக உள்ளது.

சீனா மற்றும் இந்தியாவின் எழுச்சி பற்றியும் உலகளாவிய அதிகாரம் ஆசியாவை நோக்கி நகர்வது பற்றியும் என்பதை அறியாதவரல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

சிறந்த பேரம் பேசி நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற ஒப்பந்ததாரர் போலவேசெயல்படும் ட்ரம்ப் தன்னை மட்டுமே நம்பி, புவிசார் அரசியலில் புதிய சூதாட்டத்தை ஆடுகிறார்.

ட்ரம்பின் இந்த சூதாட்டத்தால், உலகத்தில் 300 ஆண்டுகால மேற்கத்திய ஆதிக்க சகாப்தம் முடிவடையும் என்றும், மீள முடியாத பெரிய பின்னடைவை அமெரிக்கா சந்திக்கும் என்றும், அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: தடம்மாறும் அமெரிக்காதடுமாறும் ஐரோப்பாusausDonald TrumpTrump's foreign policy gamble: America is losing its way - Europe is stumbling!ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம்
ShareTweetSendShare
Previous Post

மதுபான கொள்கை முறைகேடு : டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து அடுத்து தமிழ்நாடா – அண்ணாமலை கேள்வி!

Next Post

தமிழக நிதிநிலை அறிக்கை : பனியன் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies