தமிழக நிதிநிலை அறிக்கை : பனியன் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
Jul 29, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக நிதிநிலை அறிக்கை : பனியன் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

Murugesan M by Murugesan M
Mar 11, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஜவுளி மண்டலத்தை அறிவிக்க வேண்டும் என பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பனியன் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய அளவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்குவதோடு, அந்நிய செலாவாணியை அதிகளவு ஈட்டித்தரும் தொழிலாளாக பனியன் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழில் விளங்குகிறது. அந்த பனியன் தொழிலின் மையப்புள்ளியாக விளங்கும் திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகம் மட்டுமல்லாது பீகார், ஒடிஷா, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இந்த பனியன் தொழில் விளங்கி வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனியன் தொழில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.

பன்மடங்கு உயர்த்தப்பட்ட மிண் கட்டணமும், சொத்துவரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதோடு, பல தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக நிதிநிலை அறிக்கையில், நலிவடைந்திருக்கும் பனியன் தொழிலை மீட்டெடுக்கும் வகையில் மின்கட்டணம் மற்றும் வரிகளை குறைப்பது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எத்தனையோ சிரமங்களை சந்தித்தாலும் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலான பொருளாதாரத்தையும் உயர்த்த பெரும் பங்களிப்பை வழங்கி வரும் பனியன் தொழிலை மேம்படுத்தவும், அதனை மட்டுமே நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மூலதன மானியம் 45 சதவிகிதமாக உயர்த்துவதோடு, தொழிலாளர்கள் தங்கும் விடுதியுடன் கூடிய நிறுவனங்களுக்கான மானியத்தையும் அதிகப்படுத்தினால் பனியன் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சுமை குறையும் என தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பனியன் தொழிலே பிரதானமாக இருப்பதை கருத்தில் கொண்டு திருப்பூரை மையமாகக் கொண்டு ஜவுளி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திமுக அரசின் நடப்பு ஆட்சிக்காலத்திற்கான இறுதி முழு பட்ஜெட் என்பதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதிகளவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருப்பூர் ஜவுளி மண்டல அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags: tn assemblyTamil Nadu Budget Statement: Will the expectations of Banyan workers be fulfilled?Tamil Nadu Budget Statement
ShareTweetSendShare
Previous Post

ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம் : தடம்மாறும் அமெரிக்கா – தடுமாறும் ஐரோப்பா!

Next Post

தனியார் நிறுவனத்திற்கு ஆதரவா? : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies