தனியார் நிறுவனத்திற்கு ஆதரவா? : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனத்திற்கு ஆதரவா? : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Mar 12, 2025, 06:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனியார் கட்டுமான நிறுவனத்தின் வசதிக்காக குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்த சென்னையை அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் ஊராட்சி நிர்வாகம் குறித்தும், பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.

சென்னை விமானநிலையத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கக் கூடிய பொழிச்சலூர் ஊராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சிகளில் ஒன்றான பொழிச்சலூர் ஊராட்சியில், காசா கிராண்ட் எனும் தனியார் கட்டுமான நிறுவனம் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடங்கியுள்ளது.

கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கால், குடியிருப்புகளின் விற்பனை பாதிக்கப்படும் எனக்கருதி, அந்த குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யுமாறு ஊராட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.

காசா கிராண்ட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி நிர்வாகமும், ராஜேஸ்வரி நகர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறம் உள்ள நீர்நிலைப் பகுதியில் அந்த குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நீர்நிலைகள் அடங்கிய பகுதியில் மரங்களை அகற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ராஜேஸ்வரி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அதற்கு அருகே குப்பைக் கிடங்கை அமைப்பது நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பத்தாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளுக்கு மத்தியில் அமையவிருக்கும் இந்த குப்பைக் கிடங்கால் நிலத்தடி நீர் மாசுபடும் என்கிறார் 7 வது வார்டு உறுப்பினர் ஷர்மிளா கிருஷ்ண மூர்த்தி

கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து தனியார் நிறுவனம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்குவது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமையவிருக்கும் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் ஒன்று கூடி போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசு நிர்வாகமே தனியார் நிறுவனத்தின் பக்கம் நின்றிருப்பது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Support for a private company?: Opposition to moving the garbage dump to another location!பொழிச்சலூர்
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக நிதிநிலை அறிக்கை : பனியன் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

Next Post

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருகிறது – தர்மேந்திர பிரதான்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies