மத்தியப்பிரதேசத்தில் படகு கவிழ்ந்து மாயமான 7 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிவபுரி மாவட்டத்தில் உள்ள அணையில் படகு மூலம் 15 பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது படகு நிலைதடுமாறிக் கவிழ்ந்த நிலையில், 15 பேரும் நீரில் மூழ்கினர். இவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 7 பேரை மீட்கும் பணி 12 மணி நேரத்தைக் கடந்தும் நீடித்து வருகிறது.