ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் காவல்துறை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வெளிமாநிலங்களிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுகிறதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்றது. அவர்களின் ஆதார் அட்டைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பின்னரே ரயில் நிலையத்திலிருந்து வெளியேற அனுமதித்தனர்.