தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!
Jan 14, 2026, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்துப்பட்டியைப் போலவே கொடைக்கானலுக்கு அருகே உள்ள வெள்ளை கவி கிராமம் எந்தவித தொடர்புமின்றி வசதியுமின்றி தத்தளிக்கிறது. குடிநீர், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கும் வெள்ளை கவி கிராம மக்களின் வேதனையை தற்போது பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வெள்ளை கவி கிராமம். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்க விளங்கும் கொடைக்கானல் உருவாவதற்கு முன்பாகவே தோன்றிய இந்த வெள்ளை கவி கிராமம் தற்போது வரை முறையான சாலைவசதி கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது.

கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்து அங்கிருந்து மலைப்பாதை வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் குண்டும் குழியுமான பாதையைக் கடந்து வெள்ளைக் கவி கிராமத்தை அடைந்தது நமது தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி குழு…

பத்து வருடம்… இருபது வருடமல்ல கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வரும் வெள்ளை கவி மக்கள் அவசரத் தேவைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கூட நடைப்பயணமாக மட்டுமே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் டோலி கட்டி மட்டுமே தூக்கிச் செல்லக்கூடிய அவல நிலையே இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இப்பகுதி மக்கள், கடின உழைப்பினால் விளைய வைத்த விளைபொருட்களையும் கொண்டு செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான பள்ளிகள், தொலைத் தொடர்பு வசதிகள், சுத்தமான குடிநீர் என எந்தவித வசதியுமில்லாதவர்களாக வசித்து வருகின்றனர் வெள்ளை கவி கிராம மக்கள்.

ஒவ்வொரு தேர்தலின் போது  வாக்குகளைப் பெறுவதற்காகத் தேடி வரும் அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பின் தங்களை முழுமையாக  மறந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனையை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.

சிட்டிசன் திரைப்படத்தில் இருக்கும் அத்துப்பட்டியைப் போல எந்தவித சாலைத் தொடர்புமின்றி கொடைக்கானலின் பின்புறமிருக்கும் வெள்ளைக் கவி கிராமத்திற்கு போதுமான சாலைவசதியையும், அங்கு வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Tags: Athipatti Vellai Kavi VillageTamil Nadu: People desperately seeking basic amenitiesதமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம்மக்கள்
ShareTweetSendShare
Previous Post

E- PASS முறையால் வேதனை – வாழ்வாதாரம் பறிப்பு – கண்ணீரில் வணிகர்கள்!

Next Post

அமானுஷ்யம் சாத்தான் – இது மீரட் திகில்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies