தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!
Jun 23, 2026, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்துப்பட்டியைப் போலவே கொடைக்கானலுக்கு அருகே உள்ள வெள்ளை கவி கிராமம் எந்தவித தொடர்புமின்றி வசதியுமின்றி தத்தளிக்கிறது. குடிநீர், சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவிக்கும் வெள்ளை கவி கிராம மக்களின் வேதனையை தற்போது பார்க்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த வெள்ளை கவி கிராமம். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக்க விளங்கும் கொடைக்கானல் உருவாவதற்கு முன்பாகவே தோன்றிய இந்த வெள்ளை கவி கிராமம் தற்போது வரை முறையான சாலைவசதி கூட இல்லாமல் அவலநிலையில் காட்சியளிக்கிறது.

கொடைக்கானலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணித்து அங்கிருந்து மலைப்பாதை வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் குண்டும் குழியுமான பாதையைக் கடந்து வெள்ளைக் கவி கிராமத்தை அடைந்தது நமது தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி குழு…

பத்து வருடம்… இருபது வருடமல்ல கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வரும் வெள்ளை கவி மக்கள் அவசரத் தேவைகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கூட நடைப்பயணமாக மட்டுமே செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் டோலி கட்டி மட்டுமே தூக்கிச் செல்லக்கூடிய அவல நிலையே இன்றளவும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இப்பகுதி மக்கள், கடின உழைப்பினால் விளைய வைத்த விளைபொருட்களையும் கொண்டு செல்ல வழியின்றி தவித்து வருகின்றனர். குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான பள்ளிகள், தொலைத் தொடர்பு வசதிகள், சுத்தமான குடிநீர் என எந்தவித வசதியுமில்லாதவர்களாக வசித்து வருகின்றனர் வெள்ளை கவி கிராம மக்கள்.

ஒவ்வொரு தேர்தலின் போது  வாக்குகளைப் பெறுவதற்காகத் தேடி வரும் அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பின் தங்களை முழுமையாக  மறந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் மிகுந்த மன வேதனையை ஆதங்கத்தோடு வெளிப்படுத்துகின்றனர்.

சிட்டிசன் திரைப்படத்தில் இருக்கும் அத்துப்பட்டியைப் போல எந்தவித சாலைத் தொடர்புமின்றி கொடைக்கானலின் பின்புறமிருக்கும் வெள்ளைக் கவி கிராமத்திற்கு போதுமான சாலைவசதியையும், அங்கு வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

Tags: Athipatti Vellai Kavi VillageTamil Nadu: People desperately seeking basic amenitiesதமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம்மக்கள்
ShareTweetSendShare
Previous Post

E- PASS முறையால் வேதனை – வாழ்வாதாரம் பறிப்பு – கண்ணீரில் வணிகர்கள்!

Next Post

அமானுஷ்யம் சாத்தான் – இது மீரட் திகில்!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies